_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, March 21, 2021

சொந்த ஊரை தொலைத்து வந்த ஊரை சொந்தமாக்கினோம்!

சொந்த  ஊரை தொலைத்து வந்த ஊரை சொந்தமாக்கினோம்!


நான் வசிக்கும் ஊர் மலைக்கோட்டை நகரம் திருச்சிராப்பள்ளியிலிருந்து 20கி மீ தூரத்தில் இருக்கும் அண்ணாநகர் திருச்சி-26. 

தென்கிழக்கில் பாரத் மிகு மின் தொழிற்சாலை, கிழக்கில் துப்பாக்கித் தொழிற்சாலை, வடகிழக்கில் ஹெவி அலாய் பெனிரேட் தொழிற்சாலை, வடக்கில் பன்னாட்டு விமான நிலையம், வடமேற்கில் பொன்மலை ரயில் பெட்டி தொழிற்சாலை என்று புடைசூழ அமைந்த ஊர்தான் நான் வசிக்கும் அண்ணாநகர் திருச்சி-26. 1984 ம் ஆண்டு டாக்டர் புரட்சி தலைவர் M G ராமசந்திரன் அவர்கள் தமிழ்நாடு வீட்டு வசதித் துறையினால் தொடங்கப்பட்ட ஊர்தான் அண்ணாநகர் திருச்சி-26.

ஒருமுறை டாக்டர் புரட்சி தலைவர் M G ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராக இருந்த சமயத்தில் ரஷ்யா சென்றார், அங்கு எல்லா தர மக்களும் ஒரே இடத்தில் ஏற்ற தாழ்வின்றி குழுமி வசிக்குபடியான நிலையில் ஒரு நகரத்தை பார்த்தாராம். அதுபோல் நம் ஊரிலும் ஒரு நகரம் அமைத்திட வேண்டும் என்ற கனவில் உருவான நகரம்தான் சேட்லைட் சிட்டி  திருச்சி அண்ணாநகர். 

இது ஒரு கனவு நகரம்...  உண்மையில் இது ஒரு சமத்துவபுரம். மக்களின் மனித நேயம் உருவாக்கும் பட்டறை. இங்கு கிறிஸ்தவ தெரு, முஸ்லிம் தெரு, இந்துக்கள் தெரு என்பது கிடையாது. இங்கு பறையர் தெரு, பள்ளர் தெரு, கள்ளர் தெரு, நாடார் தெரு என்று சாதிப் பேர் சொல்லும் சாக்கடை கிடையாது. இங்கு மேலோர் கீழோர் என்ற பாகுபாடுயின்றி ஓரிடத்தில் வசிக்கும்படி அமைக்கப்பட்ட வடிவம் தான் இதன் தனிச்சிறப்பு. எங்கள் தெருவில் மாரியம்மன் பல்லக்கும் வரும், மாதாவின் சப்பரமும் வரும், முஸ்லிம் சகோதரனின் சமய ஊர்வலம் வரும். எது வந்தாலும் எல்லா இனத்தவரும் வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு வரவேற்பதும் எங்கள் வழக்கம்.

இதை எதிர்பார்த்து தான் புரட்சி தலைவர் இந்த ஊரை உருவாக்கினார். மேலும் அவர் கண்ட கனவு இங்கே ஒரே இடத்தில் மருத்துவம், பொறியியல், விவசாயம் என்ற கல்லூரிகள், பள்ளி வளாகங்கள் எல்லாம் ஒர் இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்றும் எண்ணம் கொண்டார். அதன்படி தொடக்க நிலையில் ஆரம்பமாகின. காலத்தின் ஓட்டம் அவர் 1987 ல் டிசம்பர் 24 நாள் காலமானார். அதன் பின் வந்த அரசியல் மாற்றங்கள்,  ஆட்சியாளர்கள் தன்னிடம் உள்ள தரிசு நிலங்கள் பணமாக்க கல்லூரிகள் இடம் மாற்றப்பட்டது. கடைசிவரை இந்த அண்ணாநகர் புரட்சி தலைவர் கண்ட கனவுக்கு வரவேயில்லை.

இந்தியாவிலேயே  பாதாள சாக்கடை அமைக்கப்பட்ட பஞ்சாயத் இந்த அண்ணாநகர் அமைந்த நவல்பட்டு பஞ்சாயத்து தான்.  இதில் ஒரு வேடிக்கை இந்த அண்ணா நகரை என்ன காரணம் என்று முழுமையாக தெரியவில்லை இரு கூறுக பிரித்து ஒரு பகுதி கும்பகுடி பஞ்சாயத்தாகவும், ஒரு பகுதி நவல்பட்டு பஞ்சாயத்தாகவும் பிரிந்துள்ளது. அதுவே அதன் தனித்தன்மை  காற்றில் பறந்தது. என்னதான் பாதாள சாக்கடை அமைப்பு பெற்றாலும் இது ஒரு கிராம பஞ்சாயத்து என்பதால் பராமரிப்புக்கு நிதி ஒதுக்காமல் மூடும் நிலைக்கு செல்கிறது. இங்குள்ள சமுக ஆர்வலர்களும்,  பஞ்சாயத்து தலைவர்களின் பெரும்பாடு களாலும் இன்னும் ஓடிக் கொண்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் அண்ணாநகர் நவல்பட்டு  ஒரு  மிக பெரிய  பஞ்சாயத்தாக இருக்கின்றது. அதில் வருமானம் அதிகம் ஈட்டும் பஞ்சாயத்து தாகவும் இருக்கிறது.
 
சீரும் சிறப்பு கொண்ட இந்த ஊரை மாதிரி நகரமாக பார்க்கவும், சீரமைக்கவும்  எந்த தலைவர்களும் வரவில்லை.   திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக இருந்தபோது இங்கு ஒரு  ஐ டி பார்க்கை நிறுவினார்.  தற்பொழுது 3, 4 கம்பெனிகள் இயங்கும் நிலையில் இருக்கிறது.  மேலும் இதை மேம்படுத்த அடுத்து வந்த ஆட்சியாளர்கள் முன்வரவில்லை.  இன்னும் அப்படியே இருக்கிறது, காரணம் கமிஷன் பேரம்  சரியாக ஒத்துவரவில்லை என்பதுபோல் ஒரு பேச்சு வழக்கில் இருக்கிறது.

இங்குள்ள சாலைகள் பல 20 வருடம் மேல் எந்த ஒரு பராமரிப்பின்றி குண்டும் குழியாக இருக்குது. இருப்பினும் அதை மேம்படுத்த நிதி ஒதுக்கீடும்  இல்லை  கவனிப்பதும் இல்லை. ஒரு நல்ல மாடல் நகரம் பார்வையற்று கிடப்பது வருத்தப்பட கூடியதாக இருக்கின்றது. அதே போல் ஆங்காங்கே குப்பை மேடுகள் இருக்கிறது அதை பராமரிக்காமல் கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. அதே போல் பாதாள சாக்கடை மேன்கோல்ஸ் மூடிகள் இல்லாமல்  நீர் வழிந்த   நிலையில் இருப்பது.  கனவு நகரம் காணாமல் போகிறது.

ஒரு நல்ல மாதுரி நகரம் இனி வரும் ஆட்சியாளர்கள் பார்வையில் பட வேண்டும் என்பதற்காகவும் அதை மேம்படுத்த ஆவணம் செய்ய வேண்டும்  என்ற கோரிக்கையும் வைக்கின்றோம்.

1. ஒரு 24 மணி நேர மருத்துவமனை நிறுவப்பட வேண்டும்.
2. பாதாள சாக்கடை அதன் வெளியேற்றும் பம்பு நிலையங்கள் சரி செய்ய வேண்டும்
3, நல்ல ஒரு வணிக வளாகம் வேண்டும்.
4.சாலைகளை செப்பனிட வேண்டும்.
5. பகுதிக்கு ஒன்றாக விளையாட்டு அரங்கம், நல்ல  நூல் நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
6. இந்த அண்ணாநகரின் தனி சிறப்பை பாதுகாக்க வேண்டியது மட்டுமல்லாமல்  இது போல நகரம் பல இடங்களில் அமைத்து               உண்மையான சமத்துவபுரம் உருவாக்கப்பட வேண்டும்.
7. பேருந்துகள் அதிகப்படுத்த வேண்டும் .  100 அடி சாலை வழியாக ஒரு பேருந்து இயக்கினால் நல்லது.
8. ஐ டி பார்க்கில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
9. இங்கு ஒரு பகுதிக்கு ஒன்றாக சமுதாயக் கூடம் அமைக்க பட வேண்டும்.

இது எல்லாம் வரும் ஆட்சியாளர்கள் கவனிப்பார்கள் என்று நம்புகின்றோம்.

Saturday, February 15, 2020

TIP TOP(Official Lyrics video)-Beskin Joy & Barath

Saturday, June 16, 2018

"மகிழ்ச்சி"

"மகிழ்ச்சி"
இது மூளையுடன் தொடர்புடையது. பணத்தால் மற்ற காரணிகளால் மகிழ்வை கொடுக்க முடியாது. மகிழ்வை உணர சில காரணிகள் தேவைபடலாம். அதில் ஒன்று பணமாக கூட இருக்கலாம்.
பணம்தான் மகிழ்வை கொடுக்க முடியும் என்ற நிலை உங்களுடையது என்றால், அதற்கு எய்ட்ஸ் வந்து சாகலாம்.
பணம் இருந்தால் மகிழ்ச்சி தன்னால வரும் என்ற நினைப்பு சிலருக்கு இருக்கலாம். முற்றிலும் தவறான எண்ணம். மகிழ்வு என்பது துக்கம், பயம், ஆச்சரியம், கோபம் போன்ற உணர்வலை சம்பந்தபட்ட நிலை.
மகிழ்ச்சி மட்டுமே குறைந்த அதிர்வை கொடுக்கும் உணர்வு. ஆகவே அதை எல்லோரும் விரும்புகின்றோம். அதற்கும் மட்டுமே அதிகம் ஆற்றல் தேவைபடாது. கோபத்திற்கு அதிக ஆற்றல் தேவைபடுவதால் விரைவில் சோர்வடைகின்றோம். கோபத்திற்கு எப்படி பணம் தேவையில்லையோ அதுபோலதான் மகிழ்ச்சிக்கு தேவைபடாது.
நம் முன்னோர்கள் தியாண நிலையில் மகிழ்ச்சியை உணர்திருக்கின்றார்கள். அந்த மகிழ்ச்சியில் ருசி அதிகமாகவும் நிரந்தரமாகவும் இருப்பதை சொல்லிவிட்டு போய்யுள்ளார்கள். (தியாணம் என்பது கடவுள் சார்ந்த விடயம் இல்லை அறிவு சார்ந்த விடயம்)
சிரிப்பூட்டும் வாயுமூலம் சிரிக்க முடியும் என்றால் ஏன் பணத்தால் மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்கமுடியும் என்று எண்ணுகின்றோம்....
சேவல் இல்லாமல் கோழியால் குப்பையை கிழருதல் மூலம் முட்டையிட முடியும். அப்படியிருக்க பணம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க கற்றல் நன்று.
மீண்டும் ஒரு தூண்டலுடன்
ஆ.ஞானசேகரன்

Sunday, March 20, 2016

Beskin with song

Tuesday, September 23, 2014

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 4

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 4

அட ஆமாங்க எங்க ஊரில் ஒரு பாணி பூரி கடை வைத்திருந்தார்கள்  பேருந்து நிலையம் ஓரமாய் இருந்தாலும் நல்ல ஓட்டம்,  சுவையும் பரவாயில்லை...   ஒரு சில நாட்களில்  அருகில் 10 கடை அதே பாணி பூரி கடைகள்  முளைத்துவிட்டது.    அடுத்த ஒரு வாரத்தில் 10 ம்   காணவில்லை.......!!!!!  ( ஒரு தொழில் ஆரம்பிக்கும்பொழுது சமுகவியல், பொருளாதாரம், சூழ்நிலை தெரிந்து செய்தால் நல்லதுதான்...  அவன் செய்யுரான் நானும் செய்யுரேன் என்பது    கேள்விதான்)

அப்படிதான் நம்ம ஊரின் படிப்பும் ஆங்காங்கே முளைக்கும்  கல்லூரிகள், அதில் படிக்கம் மாணவர்களும்.  இதையெல்லாம்  யார் முறைப்படுத்துவது? (அம்மா அப்பாவின் கேள்வி?)  அட போங்க சார்  அரசாங்கம் சாராய வியபாரம் செய்யுது அப்பரம் நாங்களெல்லாம் சும்மாவ இருக்க முடியும் அதுதான் கல்விக்கு தொண்டு செய்ய வந்துவிட்டோம்.  இப்பெல்லாம்  கல்வி நாயகர்களே  நாங்கதான்.  கல்வி கடவுள் என்று சொல்லிக்கொள்ளவும் ஆசைப்படுகின்றோம்.  (நாங்கள் நல்லவனா தெரியுறோம்,  அரசு சாராயம் விற்கிது) 

அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அவங்க அவங்க பேரை போட்டு கொள்ளுறாங்க,  சாரயக்கடைக்கு மட்டும்  அரசு சாரயக்கடைனு வைக்கிறாங்க!  ஏம்பா?  தப்புனு தெரிந்தே செய்யுறோம்......    நல்லவேலை  காந்தி சாரயக்கடைனு வைக்கம விட்டுடோமோ!!!!!!!  (ஹி ஹி  சும்மா ஒரு வைத்தெரிச்சல்) அரசுதான் யோசிக்கல நம கொஞ்சம் யோசிச்சி வைப்போம்...

மேலும் கேள்விகள் தொடரும்
ஆ.ஞானசேகரன்


Thursday, November 7, 2013

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 3

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 3



கொலை என்பது ஒரு மனிதரை இன்னொரு மனிதர் கொல்வது அல்லது மரணம் அடையச் செய்வதாகும். பொதுவான சூழ்நிலைகளில் கொலை ஒரு குற்றச்செயலாகவே கருதப்படுகிறது. ஆனால் போர், எதிர்ப்புப் போராட்டம் போன்ற சூழ்நிலைகளில் கொலை தொடர்பான ஒரு தெளிவான அற நிலைப்பாடு கடினமானது. ( நன்றி  விக்கிப்பீடியா )

விக்கிப்பீடியா:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்க்கணினி, தமிழ் விக்கிப்பீடியா பயிலரங்கம்

கொலை ஒன்று நடந்துவிடுகின்றது...     சூழ்நிலை காரணமாகவோ,  அல்லது திட்டமிட்டோ நடக்கின்றது.   கொலையாலி பிடிபடுகின்றான்  வலக்கு  மற்றத்திற்கு செல்கின்றது.   சாட்சியங்கள் சந்திகத்தின் அடிப்படையில் நிறுபணம் இல்லாமல் போய்விடுகின்றது (சந்தேகங்கள்  குற்றவாளிக்கு சாதகமாகின்றது இதுதான் சட்டமும் சொல்கின்றது!!!!!!!)  குற்றவாளி   விடுதலையாகிவிடுகின்றான்.( என்ன கொடுமை சரவணன் இது)    

 அம்மா அப்பாவின்  கேள்வி இதுதான்   கொலை நடந்தது உண்மை   அப்படியானால் அந்த கொலையை செய்தது யார்?  அதை யார் கண்டுபிடிப்பது?  இறந்தவரின் குடும்பத்திற்கு யார் பாதுகாப்பாகவும் நஷ்டத்தை சரிகட்டவும் செய்வது?  இந்த அரசாங்கம் இதற்கு  என்ன பதில் சொல்லுகின்றது? (மக்களால்  தேர்தெடுக்கப்பட்ட  மக்களாட்சி)    சாதாண மனிதனுக்கு பாதுப்பு தராத அரசியல் அமைப்பிற்கு  என்ன தண்டனை கொடுப்பது?    

உண்மையில்  நடப்பது என்ன?  கொலையாளி விடுதலையாவதும்  கோப்பை உடப்பில் போடுவதும்தான்...  வாடிக்கையும்  வேடிக்கையும்.........

போங்கடா நீங்களும்..........   உங்க ..............!

மாற்றங்களை  எதிர்ப்பார்க்கும் மக்கள் முட்டாளாகின்றனர்........


இன்னும் கேள்விகள் தொடரும்


Friday, October 4, 2013

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்... சுற்று 2

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...சுற்று 2

ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவை காந்தியடிகள் அகிம்சை முறை போராட்டத்தில்  சுந்திர இந்தியாவை கண்டார்........

அன்று அவர் கையாண்ட அகிம்சை போராட்டம் வென்றது.   அந்த அகிம்சை வெற்றிக்கு காரணம்   காந்தியடிகளா?  வெள்ளையர்களா? 



அடுத்த சுற்றில் கேள்விகள் தொடரும்....
ஆ.ஞானசேகரன்

Friday, July 13, 2012

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...

என்னமோ? ஏதோ? மனதில் தோன்றும் கேள்விகள்...



வணக்கம் நண்பர்களே!... பல நாட்களாக இணையம் பக்கம் வரமுடியவில்லை, வேலை பளூ ஒரு பக்கம் இருந்தாலும் மன இறுக்கமும் ஒரு காரணம்தான்... என்னமோ இணையத்தில் எழுதிவைத்தால் இந்த சமுக அவலங்களையும், அநீதிகளையும் தட்டி கேட்டு விடமுடியும் என்ற எண்ணம் எனக்கு இல்லாமல் போய்விட்டது. அப்பறம் என்ன ஒரு பொழுதுபோக்காக எழுதி காலம் கடத்துவதும் பிடிக்கவில்லை. அப்படி எழுதுவதையும் வன்மையாக கண்டனம் செய்கின்றேன். இப்ப என்னதான் சொல்ல வந்தே என்று நினைகின்றீர்களா? என்னுள் கேட்கபடும் கேள்விகளை உங்களுள் கேட்டுப்பார்க்கலாம் என்ற நட்பாசைதான்.... தனி ஒருவனால் எந்த ஒரு மாற்றதையும் எதிர்பார்க்க முடியது. ஒரு சமூக புரட்சி கண்டிப்பாக தேவைபடுகின்றது. அப்படிப்பட்ட ஒரு சமுக புரட்சியை இட்டு செல்ல தன்னலமில்லா தலைவர்கள் இல்லாதது இந்தியாவிற்கே விட்ட சாபமோ என்னமோ!.... அது இருக்கட்டும் அந்த கேள்விதான் என்ன?..... ம்ம்ம்ம்ம் சொல்லுரேன்.

1. லஞ்சம்(கையூட்டு), லஞ்சம் என்று சொல்லுராங்க, அதை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுராங்க, அதற்கான சட்டமும், அரசு அமைப்பும்கூட இருக்கின்றது. அதற்காக பல சமூக அமைப்புகளும் போராடி வருகின்றது. இந்தியாவை பொருத்த வரை லஞ்சத்தை ஒழிக்க வாய்ப்புகள் இருக்கின்றதா? எப்படி? ஏன்?

2. லஞ்சம் பெருகி வருவதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதியா? அரசாங்க அதிகாரிகளா? அவர்களும் நம்மில் ஒருவர்தானே! இருந்தாலும் நம்மால் ஏன் ஒழிக்க முடிவதில்லை?

3. லஞ்சம் கொடுப்பது குற்றமா? வாங்குவது குற்றமா? அல்லது இரண்டுமே குற்றமா? ஒரு தனி மனிதன் இந்த சமூகத்தில் லஞ்சம் வாங்காமல், மேலும் கொடுக்காமல் இருக்க முடியுமா? அப்படி முடிவதில்லை என்றால் அதற்கு யார் (எது?) காரணம்? லஞ்சம் என்பது பணம் மட்டுமில்லை மேலிடத்து சிபாரிசும் லஞ்சம்தான்...

4.1947 க்கு பின் இந்தியா சுதந்திரம் அடைந்ததாக பிரகடனம் செய்யப்பட்டது.... இந்த 64 வருடங்களுக்கு பின் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் முழு சுதந்திரம் கிடைக்கின்றதா? அந்த சுதந்திரம் முறையாக வழங்கப்படுகின்றதா? அது இருக்கட்டும் முழுமையான பாதுகாப்பை இந்த இந்திய அரசும், இந்திய சட்டமும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தருகின்றதா?

5. நேற்று நாம் குழந்தைகளாக இருந்த பொழுது அந்த தெருவே, ஏன் அந்த ஊரே நம்முடையதுதான். இன்று நம் பிள்ளைகள் பக்கத்து விட்டில் பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பபடுகின்றதா? பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பாகதான் இருகின்றது, என்று முழுமையாக நம்பப்படுகின்றதா? எத்தனை கோர சமூக அவலங்கள்... அத்தனைக்கும் சட்டம் பாதுக்காப்பாக இருக்கின்றதா? அப்படிப்பட்ட சமுக குற்றவாளிகளுக்கு இந்த இந்திய சட்டம் தகுந்த தண்டனையை கொடுக்க முடிகின்றதா? ஏன்?......

6.இன்று நம் பிள்ளைகளை பள்ளிகளுக்கு வேன், மற்றும் ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றோம். அது நம்முடைய வசதி என்று நினைக்கின்றீர்களா?.... தனியாக பிள்ளைகளை அனுப்ப முடிகின்றதா?.... பக்கத்து தெருவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நாமே சென்றுதான் விட்டு வருகின்றோம் ஏன்?.... அப்படிப்பட்ட சமூக அமைப்பு உருவாக காரணம் என்ன? சட்டமும், சட்ட அமுலாக்கமும் காரணமாக இருக்கும் என்று நினைக்கலாமா? அதற்கு முக்கிய காரணம் என்ன?

7.சட்டம் சரியாக இருந்தாலும், சட்ட அமுலாக்கம், சட்டபாதுகாப்பு ஏன் சரியாக அமைவதில்லை? அரசியல் தலையீடா? அரசு அதிகாரிகளின் சுயநலமும் மெத்தன போக்கு காரணமா? அதற்க்காக யார் போராட வேண்டும்.....

8. சட்டம் தெரிந்த வள்ளுனர்கள் செய்து வருவது தொழிலா? சேவையா? வக்கில்கள் செய்வது தொழில் என்றால் அதை ஏன் அரசு ஏற்று நடத்த வேண்டும்?

9. காவல் துறை மற்றும் காவலிகள் யாருக்கு பாதுக்காப்பாக இருக்கின்றார்கள்? காவலாலிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகலுக்கு சட்டம் தெரிய வேண்டுமா? அப்படி தெரிந்து வைத்துள்ளார்களா? அதனை பரிசோதித்து பார்பதுண்டா?

10. இந்த இந்திய மக்களுக்கு நாட்டை பற்றியோ? சமூகத்தை பற்றியோ? அக்கரை இருக்கின்றதா? இல்லை என்றால் ஏன்? அந்த அக்கரையை யார் வளரும் பிள்ளைகளுக்கு ஊட்டுவது? அந்த விடயத்தில் அரசு நம்பிக்கை இழந்துவிட்டதா?............

இன்னும் கேள்விகள் தொடரும்........
ஆ.ஞானசேகரன்



Friday, June 1, 2012

கண்ணீர் அஞ்சலி (திருப்பூர் சொல்லரசன்)

கண்ணீர் அஞ்சலி (திருப்பூர் சொல்லரசன்)




நமது பதிவுலக நண்பர் சொல்லரசன் என்கின்ற ஜேம்ஸ் சகாயராஜ் நேற்று (31.05.2012) காலை இயற்கை எய்தினார். அதன் பின் திருச்சி பாலக்கரையில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் சிறிது காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டார். அண்ணாரின் குடும்பத்தாருக்கு பதிவுலகமே ஆழ்ந்த இரங்கல்களை தெரியப்படுத்துவோம்.

ஒரு நல்ல நண்பரை இழந்ததை நினைக்கின்ற பொழுது மனம் அழுத்தமாக உள்ளது. அவர் பழகுவதற்கு நல்ல மனிதர், பலமுறை நேரில் பார்த்ததால் அவரின் இழப்பு மிகவும் பாதிப்பாக இருக்கின்றது.

அவரைப்பற்றி அவரே சொல்லும் காணோளி (பழையது) .....





அவர் சொல்லரசன் என்ற தளத்தில் தனது கருத்துகளை பகிர்ந்துக் கொண்டார் அவருடைய தளம் செல்ல சொல்லரசன்

Friday, January 27, 2012

ஏன்? எதற்கு? எப்படி?....15

ஏன்? எதற்கு? எப்படி?....15

ஒரு பொருள் ஒரே இடத்தில் இருக்கின்றது என்றால் என்ன காரணமாக இருக்கலாம்? அந்த பொருளை வேறு நிலைக்கு மாற்ற என்ன தேவைப் படுகின்றது?


வணக்கங்க,.. நாம் நடக்கின்றோம், ஓடுகின்றோம், அதற்கு நம்முடைய கால்கள் தேவையாகின்றது. கால் மட்டும் இருந்தால் போதுமா? நாம் நடக்க, ஓட வேறு என்ன காரணிகள் தேவையாகின்றது. " அவனின்றி ஒரு அணுவும் அசையாது" என்பார்கள். ஆனால் ஆற்றல் இன்றி இங்கு ஒன்றுமே இல்லைங்க. அந்த ஆற்றல்தால் கடவுளாக சொல்லுகின்றார்களோ என்னவோ? இந்த அண்டம் என்பது ஆற்றலின் கூடாரம். நாம் அண்டத்தில் உள்ள எல்லா ஆற்றல்களையும் முழுமையாக பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. ஆற்றலை பற்றி முன்பே சொல்லியுள்ளோம். அதன் சுட்டி இதோ ஏன்? எதற்கு? எப்படி?..... 2

இப்போ! ஒரு பொருள் நிலையாக இருக்கின்றது என்றால் என்ன அர்த்தமாக இருக்கும்? அந்த பொருள் இடம் மாற வேண்டும் என்றால் அந்த பொருளுக்கு என்ன தேவையாகின்றது? அந்த பொருளை இடம் மாற்ற வேண்டும் என்றால் தள்ளுகின்றோம், இழுக்கின்றோம். அந்த தள்ளுதல், இழுத்தல் 'விசை'யின் அடிப்படையாக உள்ளது. ஒரு பொருள் இடம் மாற வேண்டும் என்றால் அந்த பொருளுக்கு விசை தேவையாகின்றது.

ஆமாம் விசை என்றால் என்ன? அதை காண முடியுமா? விசையை பார்க்கவோ, ருசிக்கவோ முடியாது. அதன் விளைவை மட்டுமோ உணரமுடியும். ஒரு பொருளின் மீது விசை செயல்பட்டு உண்டாக்கும் விளைவைதான் காணமுடியும். அதன் மூலம்தான் விசையை விளக்க முடியும். அதேபோல ஒரு பொருள் நிலையாக இருக்கின்றது என்றால் அந்த பொருளின் மேல் எந்த புறவிசையும் தாக்காமல் இருக்கின்றது என்பது அர்த்தம். தொடர் இயக்க நிலையில் இருக்கும் பொருளும் நிலையான பொருள் என்றுதான் சொல்ல வேண்டும். இயக்க நிலையில் உள்ள பொருளை நிறுத்தவோ அல்லது திசை மாற்றவோ விசை தேவையாகின்றது. நிலையாக இருக்கும் பொருளில் எப்பொழுதுமே நிலையான உராய்வு விசை செயல்பட்டுக்கொண்டே இருக்கும். இந்த உராய்வு விசைக்கு சாமமான புறவிசை செயல்படும்பொழுது அந்த பொருள் நிலையாகவே இருக்கின்றது.

விசையை பற்றி கலிலியோ, நீயூட்டன் இருவரும் பல ஆய்வுகள் செய்து விசையை பற்றிய விதிகளும் சொல்லியுள்ளார்கள். ஒரு பொருளின் மீது விசை செயல் படாதவரை அந்த பொருள் மாறாத வேகத்தில் இயங்குவதாக கலிலியோ கூறியுள்ளார். நியூட்டன் தம் பங்கிற்கு விசையை பற்றி மூன்று விதிகளையும் கூறியுள்ளார். அதை நீயூட்டன் விதி என்று அழைக்கின்றோம்.

விசையை பற்றி ஓரளவிற்கு புறிந்துகொண்டோம்...... ஒரு சின்ன கேள்வி நாம் காரில் (மகிழுந்து) செல்கின்றோம், ஓட்டுனர் திடீர் என்று காரை நிறுத்தும் பொழுது நாம் ஏன் முன்னோக்கி சாய்கின்றோம்?

மேலும் ஏன்? எதற்கு? எப்படி?... தொடரும்

அன்புடன்
ஆ.ஞானசேகரன்