_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, March 16, 2010

மீண்டும் உங்களோடு......

மீண்டும் உங்களோடு...

அன்பின் வலை மக்களே! வணக்கம்...
சில பல காரணங்களால் வலையின் பக்கம் வரமுடியாமலும், மனம் அதற்கான அனுமதியை கொடுக்காத காரணத்தாலும் உங்களை உங்களோடு சந்திக்க முடியாமல் போய்விட்டது. நான் வலைப்பக்கம் வராவிட்டாலும் என்பக்கம் வந்துசென்ற அணைத்து அன்பருக்கும் அன்பின் நன்றிகள். மீண்டும் உங்களோடு அதே புத்துணர்வோடு சந்திக்க முயற்சித்து கொண்டுள்ளேன். என்னதான் இருந்தாலும் சமுகத்தால் சமுக கோராப்பல்களால் கடிபடும்பொழுது வலியில்லாமல் இருப்பதில்லை அப்படிதான் எனக்கும்.

(இணையத்தில் சுட்டப்படம்)

"என்னடா வாழ்க்கை
கருவேலங்காட்டுக்குள் புகுந்த...
வண்ணத்துப்பூச்சி போல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்..." ( எங்கேயோ கேட்ட கவிஞன் வரிகள்)

சலிப்பு மிக்க வரிகளாக இருந்தாலும் சூழல்களினால் பாதிக்கப்பட்டவர்களின் மனம் இப்படிதான் போய்விடுகின்றது. "நடக்ககூடாது ஆனால் நடந்துவிட்டது" இதுதான் மனதை அலைகளித்துவிடுகின்றது. நியாயமும் நேர்மையும் இந்த சமுகம் நமக்கு கொடுக்காத பச்சத்தில்தான் வன்முறைகள் வெடிகின்றன.

"நியாயத்தையும் நேர்மையும் நாம் கொடுத்து வாங்கும் ஐந்து ரூபாயில் வைத்துக்கொள்வோம் அதற்கு மேல் எதிர்ப்பார்பது நமது முட்டாள்தனம்..." (அப்துல்லா அண்ணனின் பொன்மொழி)... வேடிக்கையாக சொன்னாலும் எத்தனை நியாயங்கள் பொதிந்த வரிகள்.

வலிகள் என்றும் நிரந்தமாக இருப்பதில்லை காலம் அதற்கான மருந்தையும் கொடுத்துவிடும். அதுபோல் நானும் அதே புத்துணர்வோடு வருவேன் என்ற நம்பிக்கையில்

ஆ.ஞானசேகரன்.