_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, October 29, 2009

என்னையும், எனக்குள் கொஞ்சும் நேரம்....

என்னையும், எனக்குள் கொஞ்சும் நேரம்....

வலைநண்பர்களே!
என்னுள் இருக்கும் சோம்பல் மற்றும் பணியிடத்தில் வேலைகளின் காரணமாக அடுத்தடுத்த இடுகைக்கு இடைஞ்சலாகவே இருக்கு. அப்படியே இணைத்தில் வந்து இடுகைக்கு தயாரானாலும் எண்ணங்களின் ஓட்டம் வற்றியே காணப்படுகின்றது. எப்படியும் இன்று உங்களுடன் தொடர்பு கொண்டே ஆக வேண்டும் என்றாலும் சொல்ல வரும் விடயங்கள் ஒழிந்து விளையாடுகின்றது. அடுத்து வரும் இடுகை ஒரு சிந்தனையை தூண்டும்படியாக அமைய வேண்டும் என்றே ஆசைப்படுகின்றேன்.

ஏன்?எதற்கு? எப்படி? எண்ணங்களையும் தொடர வேண்டும் என்ற ஆசைகள் உண்டு. இந்த கேள்விகளும் எண்ணங்களும் எனது சிறுவயதில் உள்ள கேள்விகளும் அதற்கான தேடல்களும்தான். அந்த தேடல்கள் சரியாக சென்றடைந்திருந்தால் இன்னும் இன்னும் நன்றாக இருந்திருக்கும். ஆனால் என் தேடல்களில் பல நையாண்டிகளாகவே அமைந்தது. அதற்கும் நானே பொறுப்பாக வேண்டும். ஏனனில் தேடல்களில் பொருமையின்மை அதனால் கிடைத்த கூலிதான் அந்த நையாண்டிகள். எந்த ஒரு செயலிலும்" ஏன்?" என்ற கேள்வியை உனக்குள் கேட்டுப்பார்! இது எல்லோருக்கும் தெரியும் அதேபோல் நானும் கேட்டு அதன் பதிலுக்காக நானே எனக்குள் தேடியதுண்டு.

"நீராவில் புகைவண்டி ஓடுகின்றதாம்" நானும் ஒரு வண்டி செய்ய ஆசைப்பட்டேன். அட்டையில் வண்டி செய்து அதன் மேல் ஒரு குப்பியில் தண்ணீர் வைத்து, மெழுகுவர்த்தியால் தண்ணீரை சூடு செய்து நீராவியை உண்டாக்கினேன். நீராவியும் வந்தது வண்டி ஓடவில்லை. கடைசியில் வண்டி நெருப்புக்கு இறையானது. அப்படியே நாட்கள் ஓடியது பேட்ரியில் கார் ஓடுகின்றதாக செய்திகளில் படித்ததும் ஒரே மகிழ்ச்சி என்னிடம் ஒரு பழைய பேட்ரி செல் இருந்தது. சிகரட் அட்டையில் உள்ள வெள்ளித்தாள் உதவிக்கொண்டு அந்த பேட்ரியில் மின் விளக்கு (Light) எரியவிட்டு மகிழ்ந்த எனக்கு காரையும் ஓட்டலாம் என்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. உடனே தயாரானது ஒரு அட்டைக்கார் சோடா மூடிதான் சக்கரம் பேட்ரியின் மின்சாரம் லாபகமாக அதே வெள்ளித்தாள் துணையுடன் சகரத்தில் செலுத்தப்பட்டது. செலுத்தினேன்..... செலுத்தினேன்... கார் நகரவில்லை, காற்றில் சிறிது அசைந்தாலும் கார் நகர தாயாராகின்றதாக ஒரு எண்ணம். பிறகு என்ன அதே போல நாட்கள் ஓடியது. இப்படி பல நையாண்டி சோதனைகள் எனக்குள் உண்டு.

எந்த ஒரு தேடல்களிலும் வெற்றிப்பெற்றதாக எனக்கு தெரியவில்லை ஆனால் அதற்காக நான் கவலைப்பட்டதும் இல்லை. எல்லாம் ஒரு பசுமையான இன்பங்களாகவே இருந்தது. அன்று கேட்ட கேள்விகள் இன்று உங்களோடு பகிர்துகொள்வதுதான் இந்த ஏன்? எதற்கு? எப்படி?.... இப்படிப்பட்ட கேள்விகள் நமது வயதிற்கு தெரிந்தவைகளாக இருந்தாலும் கேட்பதில் ஒரு சுகமாக இருப்பதாக தெரிகின்றது. எனவே இன்னும் தொடரும் என்றே ஆசைகள்.

மனிதனும் அவனின் சிந்தனைகளுக்கும் எல்லைகள் உண்டா? இந்த எல்லையில்லா சிந்தனைகள் சரியான பாதைகளில்தான் செல்கின்றதா? அப்படியே சென்றாலும் கட்டுப்பாடு இருக்கின்றதா? இப்படிப்பட்ட கேள்விகளும் என்னிடம் இருக்கதான் செய்கின்றது. நான் சரி என்று நினைத்த ஒன்று மற்றவர்களுக்கு தவறாகப்படுகின்றதே ஏன்? மற்றவர்கள் சரி என்று ஒப்புக்கொண்ட ஒன்று எனக்கு சரியாக படவில்லையே ஏன்? இப்படிப்பட்ட முறன்பாடுகளுக்கு காரணமாக இருப்பது அந்த செயலா? இல்லை மனிதனா? இதுவும் புரியவைக்கபடாத ஒன்றுதான். அப்படி பார்க்கையில் மனித இனத்தில் குடிபுகுந்து பல்லாயிரம் ஆண்டுகாளாக பழகிபோன ஒன்றைப்பற்றி அடுத்து வரும் இடுகையில் சிந்திக்கலாம் என்ற எண்ணங்கள் உள்ளது. அப்படிப்பட்ட ஒன்றுதான் மூடப்பழக்கங்கள். பலவகையான மூடப்பழக்கங்கள் மனிதனின் காலாச்சரத்தோடு இணைந்துள்ளது. அப்படி இணைந்துள்ளதால் அவற்றை கழைவது அவ்வளவு எளிதான விடயமும் இல்லை என்பதை நான் கண்டுள்ளேன். இதைப்பற்றி ஆழ்ந்து உங்களோடு சிந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மனிதனும் அவனை ஆட்கொள்ளும் மூடப்பழக்கங்களும்..... என்ற தலைப்பின்கீழ் அடுத்து சந்திப்போம்.

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Monday, October 26, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 6

ஏன்? எதற்கு? எப்படி?..... 6

என்னப்பா உலகம் ஒரே அவசர காலமா போச்சு.. காலை எழுந்து நானும் வேலைக்கு கிளம்பனும் மனைவிக்கும் உதவிகளை செய்யனும் மனைவியும் வேலைக்கு போகனும்... குழந்தைகளுக்கு தேவைகளை எல்லாம் செய்யனும். அப்பறம் அலுவலக வேலைகள் எல்லாம் முடிந்தது சாய்காலம் வீடுக்கு சென்றால் ஓய்வே இல்லாமல் மீண்டும் வேலைகள். ம்ம்ம் 24 மணி நேரம் பத்த மாட்டேங்குதே! யாராச்சும் 2 மணி நேரம் அதிகமா வாங்கி கொடுங்கப்பா,... இப்படி பல காலப்பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் மனிதன் வாழ்ந்துக்கொண்டு உள்ளான்.

காலம் என்றால் என்ன? அது யாரால் கொடுக்கப்பட்டது? எப்படி கணகீடப்படுகின்றது?
மனிதனில் வாழ்நாளில் காலம் ஒரு அங்கமாகி போய்விட்டது. காலம் மனிதனை துரத்துகின்றதா? அல்லது மனிதன் காலத்தை துரத்துகின்றானா? இன்னும் புரிய வைக்கப்படாத கேள்விகள். ஆனாலும் துரத்தல்கள் நின்றபாடில்லை.

பசித்தது சாப்பிட்டேன், பின்னர் பசி எடுத்ததும் சாப்பிடுகின்றேன், அதன் பிறகு பசி எடுத்தால் சாப்பிடுவேன். இது ஒரு செயல், இந்த செயலுக்கு இடையில் இருப்பதுதான் நேரம் என்று சொல்லப்படுகின்ற காலம். அதாவது ஒரு செயலுக்கும் அடுத்து வரும் செயலுக்கும் இடைப்பட்ட இடைவெளியைதான் காலம் அல்லது நேரம் என்று சொல்லுகின்றோம்.( புரியவில்லை என்றால் மீண்டும் படித்துப் பார்க்கவும்). இப்பொழுது நம்முடைய சிந்தனைக்கு!..... இங்குள்ள செயலை நீங்கி விட்டால் காலத்திற்கு மதிப்பு உள்ளதா? இல்லையா?. ஒரு செயல் நடக்காவிடில் அங்கு காலம் பூஜியமாக்கப்பட்டுள்ளதே. இதிலிருந்து காலம் என்பது இருக்கா? இல்லையா? என்ற கேள்வியும் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றது. இந்த அண்டம் ஆற்றல்களால் நிறப்பட்டுள்ளது. அந்த ஆற்றல்கள் பல இயக்கங்களாக உள்ளது. இந்த இயக்கங்கள் நின்று போனால் காலமும் நேரமும் அர்த்தங்களை கொடுக்காது (காலத்தை கணித்து கொடுக்கப்படும் ஜோசியங்கள் எப்படி சரியாக இருக்கும் என்பதை யோசிக்கவும்). எல்லா இயக்கங்களும் காலத்தினால் இயக்கப்படுகின்றதா? இல்லை இயக்கங்கள் காலத்தால் அளவிடப்படுகின்றதா? இயக்கங்கள் காலத்தால் அளவிடப்படுகின்றது என்பதுதான் சரியாக இருக்கும். இரண்டு புள்ளிகளுக்கிடையில் தூரம் இல்லை என்றால் அளவீடுகளும் இல்லை.

இயக்கங்களின் இடைவெளியில் இருப்பது காலம் என்றால் அதை எப்படி கணக்கிடுவது? சாப்பிடும் செயலை எடுத்துகொண்டால் அதன் இடைவெளி சமபாகங்களாக இல்லை எனவே இவற்றை கணக்கீட முடியாது. சம இடைவெளியில் தொடர் இயங்கங்ளால்தான் காலத்தை கணக்கீட முடியும். சூரியனும் சந்திரனும் காலத்தை அளவிட சமசீர் இயக்கங்களை கொண்டுள்ளன. இவற்றின் இயக்கங்களை வைத்து மனிதன் காலத்தை கணக்கிட்டான். பகல், இரவு என்றும் பின்னர் ஒரு பகல் ஒரு இரவை ஒரு நாள் என்றும் காலக்கணக்கீடுகள் உண்டாக்கப்பட்டன.

காலம் என்பது அண்டத்தின் அடிப்படையான கூறுகள் இவற்றை கணக்கீட முடியும் என்பது ஒரு சிலரின் வாதங்களாக இருந்தாலும் காலம் என்பது மனிதனின் அறிவு கூறுகளால் உருவாக்கப்பட்ட அளவீடுகள் என்று கூறுவதுதான் சரியாகப்படுகின்றது. தொடர் நிகழ்வுகளையும் அவற்றின் இடைவெளியையும் கணக்கில் எடுத்துக்கொண்டு கால அளவீடுகள் உருவாக்கப்பட்டன. சூரியனின் இயக்கம். பூமியின் சுழற்சி, சந்திரனின் தேய்பிறை வளர்பிறை இவற்றை அடிப்படையாக கொண்டே காலங்கள் அளக்கப்படுகின்றன. மேலும் துள்ளியமாக அளக்க ஊசல்கள் (Pendulum),ஆணுக்கருவில் வெளியாகும் எலக்ட்ரான்களின் இடைவெளி பயன் படுத்தப்படுகின்றது. இதன் அடைப்படையில் கடிகாரங்கள் உருவாகப்பட்டது. ஆரம்பத்தில் மணற்கடிகாரம்,நிழல்க்கடிகாரம் இருந்தாலும் பின்னர் ( pendulum) ஊசல்களின் இயக்கம், குவாட்ஸ் கடிகாரங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

என்னதான் காலம் நம்மை ஆட்கொண்டாலும் காலத்தை வெல்லுவதைதான் மனிதனும் மனிதனின் முயற்சிகளும் இருக்கின்றன. வேகம் வேகம் என்று கால இடைவெளியை கைகுள் வைப்பதன் விளைவுதான் கைகடிகாரம் என்றே நினைக்கின்றேன்.

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

பிடித்திருந்தால் சொல்லுங்கள் இன்னும் வரும்...

Friday, October 23, 2009

ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-4 (முற்றும்)

ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-4 (முற்றும்)

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
ஏழை, ஏழையாக இருப்பதேன்?...
ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-2
ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-3

"ஒருவர் ஒரு நாளைக்கு 50 ரூபாய்க்கு குறைவான வருமானம் என்றால் அது வறுமை என உலக வங்கி நிர்ணயத்துள்ளது. அப்படி பார்த்தால் இந்தியாவில் 41% மக்கள் வறுமையில் இருக்கின்றனர். இது ஆப்பிரிக்கா நாட்டைவிட அதிகம் என சொல்லப்படுகின்றது. 2015 ல் இன்னும் அதிகமானோர் வறுமையில் இருப்பார்கள் என்ற எச்சரிக்கையும் நம்மை கலங்க வைக்கின்றது."

என்னதான் ஏழ்மைக்காண காரணங்களையும் சொல்லியும், அதற்கு பொறுப்பானவர்களை குறை சொல்லிக்கொண்டே போனாலும் மேலே உள்ள செய்தி நம் அடிவயிற்றை கலக்க செய்கின்றது. என்னுடன் படித்த நண்பன் ராம்ராஜ் என்பவன் நன்றாக படிப்பான். கணிதத்தில் 100 சதவிகிதம் வாங்குபவன். அவனது குடும்பம் கல் உடைத்து அதில் கிடைக்கும் வருமானத்தில்தான் காலம் நடத்தியது. தினம் அவன் பள்ளிக்கு பழைய சோறும் வெங்காயமும் எடுத்துவருவான். சகமாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட கூச்சப்படுவான். ஆனால் நாங்கள் அவனை சேர்த்துக்கொள்ளுவோம். நான் என்னுடைய சாப்பாட்டை பகிர்ந்துக்கொள்வேன். நான் அவன் எடுத்து வரும் வெங்காயத்தை எடுத்து சாப்பிடுவேன். காலங்கள் ஓடியது எல்லோரும் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் வெற்றியும் பெற்றோம். ராம்ராஜ் நல்ல மதிப்பெண் பெற்றான். கணிதத்தில் 98 சதவிகிதம் எடுத்தான். என் நண்பர்கள் அனைவரும் +2 வில் சேர்ந்து படித்தோம். அவன் மட்டும் பாலிடெக்னிகில் சேர்ந்து படிப்பதாக கூறினான். பின்னர் அவனுடைய தொடர்பு கிடைக்கவில்லை. ஒரு 15 வருடத்திற்கு பின் அவனை பார்க்க நேரிட்டது அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது மூன்று குழந்தைகள், குழந்தைகளின் நிலையை பார்த்தாலே அவனின் வறுமையை புரிந்துக்கொள்ள முடிந்தது. "ராம் ராஜ் என்ன செய்கின்றாய் என்றேன்". அவன் "பாலிடெக்னிக் சேர்ந்து இரண்டாம் ஆண்டுடன் நிறுத்திவிட்டதாகவும், தந்தையின் உடல்நிலை மோசமானதால் குடும்பத்தின் சுமையை ஏற்க வேண்டி வந்தது. வேறு வழியில்லாமல் அப்பா சென்ற அதே இடத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டேன். அங்கு "பாறை வெடி" வெடிக்க செய்யும் வேலைக் கிடைத்தது. எனக்கு திருமணமும் ஆகிவிட்டது" என்றான். என்னால் அதற்கு மேல் கேள்விகளை கேட்க முடியவில்லை. அவன் குழந்தையிடம் 50 ருபாய் கொடுத்து விட்டு வந்துவிட்டேன். அதற்கு பின் அவனை பார்க்க முடியவில்லை, என் எண்ணங்கள் அவனை பற்றியே சில நாட்கள் ஓடியது பின் எப்பொழுதும் போல சகசநிலைக்கு வந்துவிட்டேன்.

என்னதான் கல்வியும் சந்தர்ப்பமும் கிடைத்தாலும் காலம் பல வேளைகளில் எங்கேயோ எட்டி உதைத்துவிடுகின்றது. என்பதை என் நண்பன் மூலம் அறிய முடிந்தது. அது போல இன்னும் சிலர் இருப்பதையும் நான் பார்த்துள்ளேன். என்னை பொருத்தவரை சரியான விழிப்புணர்வு இல்லாததால் இவர்களை போன்றவர்கள் சரியாக வாய்ப்பை பயன்படுத்த முடியாமல் போய்விட்டது என்றே தோன்றுகின்றது. இன்றைக்கு இந்த பிரச்னையை தீர்த்து விட்டால் போதும் என்ற நோக்கில் வாழ்க்கையை அடகு வைத்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். வறுமையை ஒழிக்க அரசாங்கம் கொடுக்கும் இலவசங்கள் போதுமானவை என்ற போக்கை அரசு நிறுத்திவிட்டு சரியான வழிகாட்டல்களும் விழிப்புணர்வுகளையும் உண்டாக்க முயன்றால் நன்றாக இருக்கும்.

(படம் வழக்கம்போல் இணையத்தில் சுட்டது)

நாட்டின் பொருளாதாரம் அதன் வளர்ச்சிக்கும் ஒரு நல்ல கட்டமைப்பும் ஆராய்ச்சியும் தேவை. அதைவிட முக்கியம் நல்ல திட்டங்களும் நிர்வாக திறமையும் உள்ள அரசும் தேவை. திட்டங்களை விட திட்டங்களின் செயல்வடிவம் மக்களுக்கு சென்றடைவதுதான் மிக முக்கியம். நமது நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தை சார்ந்துதான் உள்ளது. நாளைய உலகின் மிக பெரிய பற்றாகுறை "உணவு" என்ற உண்மை உலகையே கலங்க செய்துக்கொண்டு உள்ளது. இந்தியாவின் வளங்களை சரியா பயன்படுத்தினால் இந்தியா உலக நாடுகளுக்கு சோறு போடமுடியும் என்பதை நாமும் இந்த அரசும் எப்பொழுது புரிந்துக்கொள்ள போகின்றதோ தெரியவில்லை. மக்கட் செல்வமும் விளைநிலப்பரப்பும் ஒருங்கே கொண்ட ஒரே நாடு நம் வாழும் பாரத நாடுதான். அதை முறையாக பயன்படுத்த நல்ல ஒரு அரசாங்கம் தேவை.

இன்று செயல்பட்டுகொண்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகள் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுகின்றது என்பது பாராட்டகூடியது. அதே சமயம் தமிழகத்தில் வேலை செய்பவர்கள் அதிகமானோர் வட இந்தியர்களாய் இருக்கின்றனர். இதிலிருந்து தமிழகத்தில் வறுமை நிலை நீங்கியுள்ளது என்று அர்த்தமும் கொள்ளமுடியாது. இங்குள்ளவர்கள் சரியாக வேலைக்கு வருவதில்லை மேலும் நெர்மை குறைவாக உள்ளது என்பதை நிர்வாகம் சொல்லும் பொழுது நாமும் வெட்கி தலைகுனியதான் வேண்டும். மேலும் வெளிநாட்டில் ஆள் எடுப்பதற்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளார்கள் என்ற செய்தியும் வேதனைக்குறியதே. சுமார் 20 வருடங்களுக்கு முன் இருந்ததை விட இன்று வேலை வாய்ப்புகள் அதிகமாகதான் இருக்கின்றது. ஆனால் அந்த வேலைதான் வேண்டும் என்று காத்திருப்போர் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கின்றது.

வறுமை ஒழிப்புக்காகவும் சுயவேலை வாய்ப்புக்காகவும் அரசங்கம் சில திட்டங்களும் செயல்படுத்தியுள்ளது. அது எல்லோருக்கும் கிடைக்கவில்லை என்பதும் உண்மைதான். ஆனால் கிடைத்தவர்கள் சரியாக பயன்படுத்தியுள்ளார்களா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. மாடே வாங்காமல் மாட்டு கடன் வாங்குவது பின் அது இறந்துவிட்டதாக சொல்லி கடனை ரத்து செய்ய சொல்வதும் நடக்கின்றது. இதற்கு வங்கி அதிகரிகளும் துணைபோகின்றார்கள், அதற்காக இவர்கள் பணம்பெறுகின்றனர். எனக்கு தெரிந்து ஒருவர் மனைவி பெயரில் ஒன்று மகன் பெயரில் ஒன்றாக கறவை மாடு கடன் வாங்கி சரியாக உழைத்து அதிக லாபத்தை பார்த்துள்ளார். முறைகேடாக மூவர் பெயரில் கடன் வாங்கினாலும் அவரின் முறையான உழைப்பை பாராட்டாமல் இருக்க முடியாதே.

இந்தியாவில் வறுமை அதிகரித்தாலும் அதை ஒழிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதற்காக அரசாங்கத்தை மட்டுமே நம்பி இருக்காமல் நாமும் அதற்கான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதே எல்லோருடைய ஆசைகளாக இருக்கும். ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று தேடி தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. நம் அருகில் உள்ள நம்முடைய உதவிகள் தேவை படுவோர்களுக்கு சிறிய உதவிகளையும் விழிபுணர்வுகளையும் கொடுத்தாலே போதும். நாளைய இந்தியா வளமாக இருக்கும் என்று நம்புகின்றேன்...

என்னால் இந்த நாட்டிற்கு ஏழ்மையை கொண்டு செல்ல விடமாட்டேன் என்ற உறுதிமொழியை நாம் ஒவ்வொருவரும் ஏற்று சுறுசுறுப்புடனும் நேர்மையுடனும் செல்படுவோம்.

வாழ்க இந்தியா!
வளர்க இந்தியர்!

அன்புடன்
ஆ,ஞானசேகரன்.

Monday, October 19, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 5

ஏன்? எதற்கு? எப்படி?..... 5

நாம் தூரத்தில் செல்கின்றவரை சத்தமிட்டு அழைக்கின்றோம். சத்தமிட்டு அழைத்தால் அவர் திரும்புகின்றாரோ இல்லையொ ஒருவரை தொட்டு கூப்பிட்டால் கண்டிப்பாக திரும்புவார். ஆமங்க அதுதான் தொடும் உணர்வின் சிறப்பு. இப்படிப்பட்ட உணர்வை கொடுப்பது நமது உடம்பை போர்த்திருக்கும் தோல். தோலில் உள்ள மிக நுண்ணிய உணர்வு ஏற்பிகள் (sensory receptors)தான் இந்த உணர்வை கொடுக்கின்றது. தொடுதல், அழுந்த தொடுதல் (அதனால் ஏற்படும் வலி), அழுத்தம், வெப்பம், குளிர்ச்சி போன்றவற்றை உடன்க்குடன் மூளைக்கு அனுப்பி வைப்பதுதான் இந்த ஏற்பிகளின் வேலை.

இந்த ஏற்பிகள் அதிகமாக இருக்கும் இடங்களில் உணர்வுகளும் அதிகமாக இருக்கும். விரல் நுணி, உதடு, காது மடல் போன்ற இடங்களில் இந்த ஏற்பிகள் திரளாக இருப்பதால் தொடும் உணர்வும் அதிகமாக இருக்கும். நீரின் சூட்டை அறிய விரலில்தான் தொட்டு பார்க்கின்றோம். உதட்டின் உணர்வை காதலர்கள் புரிந்துக்கொண்டதால்தான் முத்தங்கள் பரிமாறப்படுகின்றது.

ஒருவனை என்னதான் திட்டினாலும் உணர்வற்றவனாக இருந்தால், அவனுக்கு தோல் தடிமம் என்று சொல்லுகின்றோம். அந்த அளவிற்கு உணர்வுகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது தோல் தொடு உணர்வு. தோலுக்கு மட்டும் இந்த தொடும் உணர்வு இல்லை என்றால் உயிர் உள்ளவன் என்பதற்கு அர்த்தம் இல்லாமலே போயிருக்கும். உயிரோடு கலந்தே இருப்பதே இந்த தொடும் உணர்வு. ஒருவரோடு ஒருவர் கட்டி பிடிப்பதால் வரும் உணர்வுகளுக்கு இணையான இன்பம் இருக்க முடியாது என்றே கூறலாம். பிரிந்தவர் கூடினால் உடனே கட்டி பிடித்து அன்பை பகிர்ந்துக்கொள்கின்றனர்.

மனிதனுக்கு இணையான ரோபோக்களுக்கு இந்த தொடும் உணர்வுதான் இல்லாமல் இருக்கும். அதையும் சமீபத்தில் சோனி நிறுவனம் தொடும் உணர்வோடு ரோபோக்களை தயாரித்துள்ளனர். தொட்டால் திரும்பி பார்க்குமாம். மெல்லிய இழைகளால் தோலை போல போர்த்தி தயாரித்துள்ளார்களாம். வரும் காலங்களில் நாம் ரோபோக்களோடு போட்டியிட வேண்டி வருமோ என்னவோ?

விலங்குகளுக்கு மட்டும்தான் இந்த தொடு உணர்வு இருக்கின்றதா? தாவரங்களுக்கும் இந்த உணர்வு இருப்பதாக அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள். தொட்டால் சினுங்கி இலையை தொட்டால் சுறுங்கிக்கொள்ளும்.

தோலை பாதுக்காப்பாக வைத்துக்கொண்டாலே உடலின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தோலில் உணர்வுகள் இல்லாமல் போனால் நோய்க்காண அறிகுறிகள்தான். ஒருவகை வைரஸ்சால் உண்டாக்கும் நோய்தான் தொழுநோய். உணர்வற்ற தோல்களில் உண்டாகும் புண்களால் உடலை அலங்கோலமாக்கிவிடும். இது ஒரு தொற்று நோய் வகையை சேர்ந்ததே. இதற்கு முறையான மருத்துவம் பலனை அழிக்கும். அரசு சுகாதார மையங்களில் இதற்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றது.

இப்படிப்பட்ட தொடும் உணர்வு செல்கள் வயிற்றில் உள்ள குடல் மற்றும் இறைப்பைகளுக்கு கிடையாது. குடலின் மேற்பறப்பில்தான் குறைந்த அளவில் ஏற்பிகள் இருக்கின்றது. குடல் மற்றும் இறைப்பைகளில் உணர்வு செல்கள் இருந்தால் எப்படி உணரப்படும்? நாம் உண்ணும் உணவு செல்லும் உணர்வை கொடுக்கும். குடிக்கும் நீர் செல்லும் இடமெல்லாம் உணரப்படும். இது நமக்கு ஒரு வித சங்கடங்களை கொடுக்கும் எனவே இயற்கையாகவே உணர்வு செல்கள் குடலில் இல்லாமல் இருக்கின்றது.
முடி, நகங்களுக்கு உணர்வு ஏற்பிகள் கிடையாது. அதனால் இவற்றை வெட்டினாலும் வலிக்காது. முதுகில் ஏற்பி செல்கள் குறைவாக இருக்கும் அதனால்தான் செல்லமாக வலியிள்ளாமல் அடிக்க முதுகில் அடிப்பார்கள்.

வேர்க்காத இடம் உதடு.
வலிக்காத இடம் முடியும் நகமும்.
எலும்பு இல்லா இடம் நாக்கு, மூக்கு, காதுமடல்.
அழகு கொடுப்பது தோல்,
அணைத்தால் கிடைப்பது அன்பு.
தொடும் உணர்ச்சி இல்லாதவன் பிணத்திற்கு சமமானவன் ஆவான்.

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

Friday, October 16, 2009

ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-3

ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-3

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
ஏழை, ஏழையாக இருப்பதேன்?...
ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-2

ஏழ்மைக்கான காரணங்கள் ஆயிரங்கள் இருந்தாலும் அவற்றை உலகிலிருந்து கழைவது இன்னும் ஆராய்வு வடிவிலேயே இருப்பதுதான் நம்மில் பலருக்கு இருக்கும் கேள்விகள். பொருளாதர கொள்கைகளாக இப்போதைக்கு நம்மில் இருப்பவை தனியுடமை/முதலாளித்துவமும் தான். சோவியத் யூனியன் பிரிவிற்கு பின் தனியுடமை கொள்கை கேள்விக்குறியவைகளாக ஆனாலும் சீனாவில் ஏற்புடையதாகவே இருக்கின்றது. சீனாவின் பொருளாதாரக் கொள்கை உலக நாடுகளை பயம்கொள்ள வைகின்றது என்பதும் உண்மைதான். அதே போல உலகின் பல நாடுகள் அமெரிக்காவை நம்பியே இருக்கின்றது. அமெரிக்காவின் பொருளாதரக் கொள்கை முதலாளித்துவம் முதலில் வெற்றியை கொடுத்தாலும் பின்னர் பின்னடைவையும் சந்திக்கதான் செய்கின்றது. இரண்டிலும் நலது கெட்டது இருந்தாலும் தேவையான சூழ்நிலைக்கு அவைகள் ஏற்புடையதாக்கப்படுகின்றது. இதற்கு இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில்தான் இந்தியா இருந்து வருகின்றது. இந்த நிலை தற்போதைக்கு சாதகமாக இருந்தாலும் இது ஒரு ஆபத்தான நிலைதான். இவற்றிலிருந்து தன்னை பாதுக்காத்துக்கொள்ள ஒரு சுயமான பொருளாதார கொள்கை தேவை என்பதை நாம் மறுக்க முடியாது.

அதுபோல இந்தியா தன்னை தனித்தன்மையாக காட்டிகொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் ஏற்றுகொள்கின்றார்களோ இல்லையோ சில மாற்றங்களை செய்துதான் ஆக வேண்டும் என்ற நிலைதான் இன்றைய இந்தியா. ஏழைகள் டாட்டா, பிர்லா போன்று பணக்காரர்களாக ஆக வேண்டாம் சாதாரணமாக கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகள் கிடைத்தாலே நாம் மகிழ்ச்சியடைவோம். அப்படிப்பட்ட உரிமைகளையும் சலுகைகளையும் மக்கள் முறைப்படி பயன்படுத்தி கொள்ள வேண்டுமே. அதற்கு தற்பொழுது உள்ள சனநாயக முறையால் கட்டுப்படுத்த முடியுமா? என்றால் சந்தேகமே. இன்று வளர்ந்து வரும் பல நாடுகளில் மக்களுக்கு உரிமைகள் எந்த அளவிற்கு கொடுக்கின்றதோ அந்த அளவிற்கு உரிமையை சரியாக பயன்படுத்தாதவர்களுக்கு தண்டனைகளும் விழிப்புணர்வுகளையும் கொடுக்கின்றது. இதில் சனநாயக நாட்டில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் மறைமுகமாகவோ மாற்று வழிகளிலோ கொடுக்கப்படுகின்றது என்றால் நம்பமுடியாது ஆனாலும் நிருபிக்க வாய்பில்லா உண்மை.


சந்திரனுக்கு விண்கலம் அனுப்பி சாதனைகள் புரிந்தாலும் இன்னும் இந்தியாவில் பிச்சைகாரர்கள் இருக்கின்றார்கள் என்றால் யாரை குறைசொல்ல முடியும். எவ்வளவு நாட்களுக்கு அரசாங்கத்தையே குறைசொல்லிக்கொண்டு இருக்க போகின்றோம். எத்தனை பிச்சைகாரர்கள் வேலை செய்ய தாயாராக இருக்கின்றார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். சுமார் 25 வருடங்களுக்கு முன் தொழு நோயாளிகள் பலர் தெருவோரம் பிச்சை எடுத்துகொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு தகுந்த இலவச கட்டாய சிகிச்சைகளும் பின்னர் மறுவாழ்வு மையங்களும் செய்துகொடுத்து இன்று அப்படிப்பட்ட சூழல்களை இல்லாமல் செய்துள்ளார்கள் என்றால் நாம் இந்த இந்திய அரசிற்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். இன்றும் தொழுநோய்க்கான சிகிச்சை அரசு சுகாதார மையங்களில் மின்னல் வேகத்தில் செயல்படுகின்றதை நான் பார்த்துள்ளேன். அவற்றுகெல்லாம் என்னுடைய நன்றியின் கரகோசம் உண்டு. திருச்சி மாவட்டத்திலுள்ள செம்பட்டு என்ற கிராமத்தில் கத்தோலிக்க கிருஸ்துவ அமைப்பால் ஒரு தோழுநோயாளி மறுவாழ்வு மையம் இயங்கி வருகின்றது. இங்கு அவர்களுக்கு வேலையும் சிகிச்சையும் கிடைக்கின்றது.


உங்கள் வீட்டின் அருகில் நல்ல ஆரோக்கியமானவர்கள் பிச்சை எடுத்துக்கொண்டு வருகின்றார்கள். நீங்கள் அவர்களுக்கு உங்கள் வீட்டில் உள்ள சிறு வேலைகளை கொடுத்து பின் நல்ல பணம் தருவதாக கூறிப்பாருங்கள். ஒன்று அவர்கள் செய்ய மாட்டார்கள் அல்லது செய்வதுபோல நடித்து கிடைத்ததை எடுத்துக்கொண்டு ஓடிவிடுவார்கள். இப்படிதான் அரசாங்கம் கொடுக்கும் மறுவாழ்வு திட்டங்களும் நாசமா போகின்றது. இவற்றிக்கு நாமும் முறையற்ற அரசு அதிகாரிகளும் காரணமாகின்றனர். இப்படிப்பட்ட மறுவாழ்வு திட்டங்கள் சரியாக செயல்பட வேண்டும் என்றால் முறைகேடுகளுக்கு காரணம் எதுவாயினும் மன்னிப்பு இல்லா தண்டனைகள் வழங்கப்பட்டுதான் ஆக வேண்டும். இது ஒரு சர்வாதிகாரம் என்றாலும் வரவேற்கதான் வேண்டும். அதை விட எல்லோருக்கும் விழிபுணர்வும் தேவை. எத்தனை மாட்டு கடன், எத்தனை ஆட்டுக்கடன், எத்தனை சிறுதொழில் கடன் பயன் இல்லாமல் போய்கொண்டுள்ளது.

இயற்கை வளங்கள் அதிகம் இருந்தும் இன்னும் ஏழ்மையின் சதவிகிதம் கூடிகொண்டே இருப்பதற்கு காராணம் இந்த பொருளாதாரக்கொள்கை, அரசு, மற்றும் சமூக அமைப்பு என்று சொல்லிகொண்டே இருப்பதை விட நம்மில் இருக்கும் சோம்பேறி தனம், பொறுப்பின்மையை, நேர்மையின்மையை அறுத்தெடுக்க வேண்டும் என்பதே முக்கியம் என்று, இன்றைய சிந்தனைகளாகச் சொல்லி............ உங்களின் எண்ணங்களையும் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றேன்.

இன்னும் இதைப்பற்றி வரும் இடுகைகளில் சிந்திக்கலாம்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Sunday, October 11, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 4

ஏன்? எதற்கு? எப்படி?..... 4

நாம் நடக்க நம்முடைய கால்கள்தான் பயன்படுகின்றது என்பதை நம்ம வீட்டு சின்ன குழந்தையும் சொல்லிவிடும். வீட்டின் முற்றத்தில் வெளக்கெண்ணை கொட்டிவிடுகின்றது. தாத்தா அவசரமாக நடந்து வருகின்றார், கொட்டிய வெளக்கெண்ணையில் அவர் கால் பட்டதும் நடக்க முடியாமல் வலுக்கி விழுந்துவிடுகின்றார்.
நம்முடைய சிந்தனைக்கு! தாத்தாவிற்கு கால்கள் இருந்தும் வெளக்கெண்ணையின் மேல் பட்டதும் ஏன் நடக்கமுடியாமல் வலுக்கி விழுகின்றார்?

மேற்கண்ட தாத்தா சம்பவத்தில் கால்கள் இருந்தாலும் நடக்கமுடியாமல் போனதிலிருந்து நாம் நடக்க வேறு ஏதோ ஒன்று பயனாகின்றது என்றும் அவற்றை வெளக்கெண்ணை தடுப்பதால்தான் தாத்தாவால் நடக்க முடியாமல் போகின்றது என்பதையும் புரிந்துக்கொள்ள முடிகின்றது. அப்படி நடக்க பயனாகும் ஒன்றை உராய்வு (Friction) என்று அழக்கப்படுகின்றது. உராய்வு என்றால் என்ன? அவை நடக்க எப்படி பயனழிக்கின்றது?
இரண்டு தளங்கள் அல்லது பரப்புகள் ஒன்றோடு ஒன்று உராயந்து நகரும் பொழுது உருவாகும் எதிர் விசைதான் "உராய்வு" என்று அழைக்கின்றோம். அப்படி ஏற்படும் உராய்வால் வெப்பம் வெளியாகின்றது. அதாவது விஞ்ஞானத்தில் இயக்காற்றல் வெப்பாற்றலாக மாற்றப்படுகின்றது. பரப்பின் அணுக்கூறு மற்றும் அடர்த்தியை பொருத்து உராய்வு மாறுப்படுகின்றது.

முதல் படியை மிதித்து அழுத்தினால்தான் இரண்டாம் படிக்கே செல்லமுடியும். முதல் படியில் கிடைக்கும் உராய்வு விசைதான் நாம் இரண்டாம் படிக்கு செல்ல உதவியா இருக்கின்றது. இந்த உராய்வு செயல்பட வேண்டும் என்றால் பூமியின் ஈர்ப்பு சக்தியும் துணையாகின்றது. சந்திரனில் ஈர்ப்பு சக்தி இல்லாததால் விண்வெளி வீரர்கள் சந்திரனில் பறந்து பறந்து நடப்பதுபோல தெரிகின்றது.

மனிதனின் முயற்சியில் முக்கியமான ஒன்று தூரத்தை கடக்கும் நேரத்தை குறைத்தல். இதுதான் மனிதனின் வெற்றியும் சவாலும். வேகம் அதிகப்படுத்தும்பொழுது உராய்வு விசையும் நேர் விகிதத்தில் உயர்கின்றது. அதனால் வெளிப்படும் வெப்பமும் அதிகமாகின்றது. அதே போல நடக்க எந்த அளவிற்கு உராய்வு பயணாகின்றதோ அதைவிட வேகமாக நடக்க அல்லது செல்ல உராய்வு தடையாகவும் இருக்கின்றது. இப்படிப்பட்ட தடைகளை வேல்வதினால் மனிதன் தன் தூரத்தை கடக்க வெற்றிக்கொள்கின்றான். உராய்வை குறைக்க அல்லது தேவையான அளவு கட்டுப்படுத்த இளகிகள் தேவையாகின்றது. அப்படிப்பட்ட இளகிகள் உயவு இளகிகள் எனப்படுகின்றது. உயவு இளகிகளாக கிரீஸ்(மசகு), உயவுநெய்களாக மசகெண்ணெய் (Lubricants ) பயனாகின்றது. மேலும் உராய்வை குறைக்க Bearing (தாங்கிகள்) மற்றும் உருளை தாக்கிகள் (Ball Bearing) பயனாகின்றது.

"வண்டி உருண்டோட அச்சாணி தேவை" வட்டத்தையும் உருளையும் மனிதன் பயன்படுத்த கற்றுக்கொண்ட பின் கடக்கும் தூரத்தின் நேரம் குறைந்தது என்று மட்டும் இல்லாமல் சக்தியும் வீண் செலவிலிருந்து கட்டுப்படுத்தப்பட்டது. மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டியின் சக்கரம் வண்டியின் அச்சாணியில் சுற்றும்பொழுது எற்படும் உராய்வை தடுக்கவும் உராய்வால் உண்டாகும் வெப்பத்தை கட்டுப்படுத்தவும் அச்சாணியில் வண்டி மை தடவப்படுகின்றது.
வண்டிமை எப்படி தயாரிக்கப்படுகின்றது? நெல் வைகோலில் எரிக்கப்பட்ட சாம்பலை எடுத்துகொண்டு அந்த சாம்பலை வெளக்கெண்ணெயில் குழப்பி தயாரிக்கப்படுகின்றது. அப்படி தயாரித்த வண்டி மையை சிறிய துணியை கொண்டு அச்சாணியில் சுற்றிவிடப்படுகின்றது. தற்பொழுது கிரிஸ் பயன்படுத்தப்படுகின்றது. இந்த வண்டிமை உராய்வையும் வெப்பத்தையும் கட்டுப்படுத்துகின்றது.

திடீர் என்று வானத்திலிருந்து வால் நட்சத்திரம் போன்று பூமியை நேக்கி வருதை பார்த்திருப்போம். ஆனால் அவைகள் பூமியை வந்தடைவதில்லை. உண்மையில் அவைகள் நட்சத்திரமோ அல்லது எரி குழம்போ இல்லை விண்ணில் சுற்றி திரியும் விண்கற்கள். எண்ணற்ற விண்கற்கள் விண்ணில் சுற்றிகொண்டு உள்ளதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர். அப்படிப்பட்ட விண்கற்கள் பல சமயம் தன் சுற்றுப்பாதையை விட்டு பூமியை நோக்கி வீசப்படும். பூமியை நோக்கி வீசப்பட்ட கற்கள் பூமியில் ஈர்ப்பு சக்தியால் ஈர்க்கப்பட்டு காற்றின் வளிமண்டலத்தை கடக்கும்பொழுது ஏற்படும் உராய்வின் காரணமாக அதிவெப்பம் உண்டாகி கற்கள் புஸ்பமாகின்றது. அதனால் ஒளிப்பிளம்பாக நமக்கு தெரிகின்றது. சிலசமயம் விண்கற்கள் பூமியை தாக்கி பெரிய பள்ளங்களையும் ஏற்படுத்துயுள்ளது.


ஆதிகால மனிதன் நெருப்பையும் அதன் பயன்பாட்டையும் அறிந்துக்கொண்ட பின் நெருப்பை உருவாக்கும் முயற்சியில் சிக்கிமுக்கி கல்லும் அதன் உராய்வினால் உண்டாகும் வெப்பத்தையும் பயன்படுத்திக்கொண்டான். சிக்கிமுக்கி கல்லை ஒன்றோடு ஒன்றை மோதி உரசும் பொழுது உண்டாகும் வெப்பத்தினால் நெருப்பை உண்டாக்கினான். அதே போல் மரச்சட்டத்தில் அழுத்தமாக உலோக கம்பியை சுற்றும்பொழுது உண்டாகும் வெப்பத்தில் பஞ்சை வைத்து நெருப்பை உண்டாக்கினான். உராய்வு இல்லையேல் நெருப்பை உருவாக்கும் தீப்பெட்டியும் இல்லைதான்.

உராய்வையும் அதன் பயன்பாட்டையும் முறையாக பயன்படுத்த கற்றுகொண்டதினால் மனிதன் விண்ணையும் மண்ணையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளான்.

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

Friday, October 9, 2009

கலைஞர் தொலைக்காட்சியில் டாக்டர் முனியப்பன்

கலைஞர் தொலைக்காட்சியில் டாக்டர் முனியப்பன்
அன்பு நண்பர்களே! நமது சக பதிவர் டாக்டர் முனியப்பன் (முனியப்பன் பக்கங்கள்) அவர்கள் நாளை (10/10/2009) மாலை 9.00 மணிக்கும் 24/10/2009 அன்று மாலை 9.00 மணிக்கும் கலைஞர் தொலைக்காட்சியில் ரோஸ் நேரம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கின்றார். சந்தர்ப்பம் உள்ளவர்கள் பார்த்து பின்னர் உங்களின் கருத்துகளை அவர்களின் தளத்தில் தெரியப்படுத்துங்கள். டாக்டர் முனியப்பனின் தளம் "முனியப்பன் பக்கங்கள்".

இவர் மதுரையை சார்ந்தவர். தனது சொந்த அனுபவங்கள் மற்றும் தான் ருசித்த சம்பவங்களை அவரின் தளத்தில் எழுதி வருகின்றார். அதேபோல் நல்ல இடுகைகளை பார்த்து பாராட்டவும் செய்கின்றார். டாக்டர் முனியப்பன் அவர்களுக்கு வாழ்த்துகள்! (சிங்கப்பூரில் கலைஞர் தொலைக்காட்சி பார்க்க இயலாததால் வருந்துகின்றோம்).

அன்புடன்
ஆ.ஞானசேகரன்.

Wednesday, October 7, 2009

ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-2

ஏழை, ஏழையாக இருப்பதேன்?... பாகம்-2

முன் உள்ள பகுதியை படிக்க சுட்டியை சுட்டவும்
ஏழை, ஏழையாக இருப்பதேன்?...

சென்ற பகுதியின் பின்னூட்டத்தில் ஷண்முகப்ரியன் அவர்கள் சொன்ன கருத்து எல்லோரையும் சிந்திக்க வைக்கின்றது.
ஷண்முகப்ரியன் said...

ஏழ்மைக்குப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கிறோம்.
பொருளாதார முறைகேடுகள்,சமூகவியல் காரணங்கள்,இயற்கையின் சீற்றங்கள்,ஆன்மீகத் தேறுதல்கள்,ஜோதிடக் கணிப்புக்கள்,மக்களின் அறிவின்மை,மனிதர்களின் ஆற்றலின்மை,விதியின் கொடுமைகள் இப்படி எத்தனையோ காரணங்கள்.

ஆனால் ஏழை மட்டும் ஏழையாகவே இருக்கிறான்.

இவற்றிக்கு விடைத்தேடும் தேடல்தான் இந்த பகிர்வு. எத்தனை காரணங்கள் இருந்துவிட்டு போகட்டும் சாதாரண மனிதனின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் இருக்கும் அரசு குற்றவாளிதான். ஒரு நாட்டின் மிக பெரிய சொத்து இந்த மண் மற்றும் அந்த மண்ணின் மைந்தன் இவை இரண்டும் பொதிந்து கிடக்கும் பாரதத்தில் பட்டினிகளும் பட்டினிச்சாவுகளும் இருக்கின்றது என்றால் நிச்சயம் ஒரு மாபெரும் முறைகேடுக்கு அரசு துணைபோகின்றது என்பதுதான் உண்மை.
ஏழ்மையிலிருந்து சாமானியன் விடுபட வேண்டும் என்றால், அவனுக்கு தேவை தரமான கல்வி. அந்த கல்வி தற்பொழுது வியாபாரமாக்கப்பட்டுள்ளதை நாம் பார்க்கின்றோம். காமராஜர் கொண்டுவந்த இலவச கல்வி மற்றும் மதிய உணவுத்திட்டம் எல்லாம் மூடப்பட்டுள்ளது. கல்வியின் முக்கியத்துவத்தை சாமானிய ஏழைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்காமலே இந்த அரசாங்கமும் இருந்து வருகின்றது. ஏழை மாணவர்களுக்கு உயர்கல்விக்காக வட்டியில்லா கடன் வழங்கப்படுவது எத்தனை சாமானியனுக்கு தெரிந்துள்ளது. அந்த அளவிற்கு விழிப்புணர்வு இல்லாமலே இருக்கின்றனர். அதே போல் அந்த கல்விக் கடன் பெறுவதும் சுலபமாக்கப்படவில்லை. தற்பொழுது வந்துள்ள செய்தி வட்டி இல்லாத கல்விக் கடன் பெறுவதில் சிக்கல் : தவிக்கும் மாணவ மாணவியர்

பொதுவாக இந்தியாவிலும் முக்கியமாக தமிழகத்திலும் சமீபகாலமாக வேலையிடங்களில் நேர்மை குறைந்துள்ளதும் அதனால் அவர்கள் வேலையிழப்புக்கு ஆழாவதும் காணமுடிகின்றது. இவ்வாறு அவர்களாகவே ஏழ்மையை தேடிச்செல்லும் அவலங்களும் நடந்துக்கொண்டுதான் உள்ளது. உழைப்பை சுரண்டி திண்ணும் பெரிச்சாலிகளுக்கு மத்தியில் உழைக்க மறுக்கும் சோம்பேரிகளும் இருக்கதான் செய்கின்றனர். இதனால் பிச்சை எடுக்கும் அவலங்களும் பெருகி வருகின்றது. காலம் காலமாக நம்மோடு கலந்தே வருவது இந்த ஏழ்மையும் ஒன்று, இதற்கு ஒட்டுமொத்தமாக ஒரு சிலரை மட்டும் குறை சொல்வது என்பது சரியாகுமா? என்ற கேள்வியும் இருக்கதான் செய்கின்றது. ஒரு மனிதனின் இரண்டு கைகள் அவனின் உழைப்பும் இந்த நாட்டின் மிக பெரிய சொத்து. அதை இந்த நாடும் இந்த நாட்டு அரசும் முறையாக பயன்படுத்திக்கொண்டாலே ஏழ்மை பறந்தோடி போகும். வேலை என்பது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். அதைவிட வேலைச்செய்யாதவனை தண்டனைக்குள்ளாக்க வேண்டும்.

பணம், தங்கம், போன்ற செல்வ மதிப்புகள் எல்லாம் மாயையானது. ஆனால் இந்த மண்ணின் மதிப்பு நிரந்தரமானது. இந்த மண் அரசுடைமையாக்கப்பட வேண்டும். முறையான நில பட்டாக்கள் வழங்கப்பட்டாலே இந்தியாவின் ஏழ்மை பறந்தோடும் என்பதுதான் உண்மை. நிலம் யாருக்கும் முழு சொந்தமாக்கக்கூடாது எல்லாம் அரசுக்குதான் சொந்தம் அவற்றை பயன்படுத்தும் உரிமை வழங்கப்பட வேண்டும் அதற்கான வரிகள் வசூல் செய்து வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். இப்படிப்பட்ட மாற்றங்களால் நிலபிரபுகளிடம் இருக்கும் தேவைக்கு அதிகமான நிலங்களை சாமானிய எழைகள் பயன்படுத்த முடியும். இதனால் அவர்களின் ஏழ்மை விரட்டப்படும்.

ஒருவன் பசி என்று வருகின்ற பொழுது அவனுக்கு ஒரு மீன் துண்டை கொடுப்பதை விட அவனுக்கு மீன்பிடிக்க கற்றுகொடுக்க வேண்டும். என்பது பைபிளின் வாசகம், ஒருவனுக்கு இலவசமாக கொடுக்க வேண்டியது கல்வியும் வேலைக்காண வாய்ப்பும் ஆகும். அதை விட்டுவிட்டு கவர்ச்சிகரமான இலவசங்களை தவிற்கப்பட வேண்டும்.

இவ்வாறு எல்லாம் நடக்க வேண்டும் என்றால் தற்பொழுது இருக்கும் ஜனநாயகத்தால் முடியாமா? என்றால் சந்தேகம்தான். தன்நலம்மில்லா ஒரு சர்வாதிகாரம் ஒன்று சிறிது காலம் வேண்டும் என்பதே கசப்பான உண்மை.

இன்னும் இதைப்பற்றி வரும் இடுகைகளில் சிந்திக்கலாம்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்.


Monday, October 5, 2009

ஏன்? எதற்கு? எப்படி?..... 3

ஏன்? எதற்கு? எப்படி?..... 3

ஆதிகால மனிதன் தன்னுடைய அனுபவங்கள் மூலமாக வாழ்வியல் அறிவியல் மற்றும் கணிதங்களை கற்றுகொள்கின்றான். அப்படி கற்றுகொண்டவைகளில் மிக முக்கியமான ஒன்று முக்கோணம் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு முக்கோணம் பயன்பட்டு வருகின்றது. குறைந்த எண்ணிக்கை கோடுகளால் உருவாக்கப்படும் பரப்பு என்றால் அது முக்கோணம். முக்கோணம் மூன்று கோடுகள் மற்றும் மூன்று கோணங்கள் கொண்டு உருவாக்கப்படுகின்றது.
[படம் 1]
நாடோடிகளாய் வாழ்ந்த மனிதன் பின்னர் ஒவ்வொரு குழுக்காளாக ஓரிடத்தில் வாழ கற்றுக்கொண்டான். அப்படி வாழ அவனுக்கு இருப்பிடம் தேவைப்பட்டது. தனக்கென வீடுகள் கட்டிக்கொண்டு வாழத்தொடங்கினான். அப்படி கட்டிய வீடுகளின் கூரைகள் முக்கோண வடிவில் இருப்பதை காணலாம். இன்றும் பல வீடுகளின் கூரைகள் முக்கோண வடிவில் இருப்பதை காண முடிகின்றது. எகிப்தில் உள்ள பிரமிடுகள் கூரைகளும் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டிருக்கும்.
[படம் 2]
[படம் 3]
இப்பொழுது நம் சிந்தனைக்கு வீட்டின் கூரைகள் ஏன் முக்கோண வடிவில் அமைக்கப்பட்டது?

சுலபமாக பதில் சொல்லிவிடலாம் என்றாலும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கேள்வி. அனுபவங்கள் மூலம் கண்டடுத்த பொக்கிசம் என்றே சொல்லலாம்.
1.குறைந்த பக்கங்களால் அடைக்கப்படும் பரப்பு எனவே வேலையும் செலவும் குறைவு. கணதவியல் அடிப்படையில் உள்ள பயன்.
2.எந்த ஒரு புற விசை தாக்கும் பொழுது உருவம் மாற அமைப்பு முக்கோணத்தில் சிறப்புகளாகும். இந்த விசை சதுரம் செவ்வகத்தில் தாக்கினால் உருவம் சிதைந்து சாய்சதுரமாகவும் சாய்செவ்வகமாகவும் சிதையும் ( படத்தில் காண்க).
[படம் 4]
எனவே இயற்கை சீற்றங்களால் வீடுகள் பாதுகாக்கப்படுகின்றது. மழை நீர் கூரையில் எளிதாக வழிந்துவிடுகின்றது. தற்காலத்தில் கூரையில் மேல்தளம் அரை வட்ட வடிவில் அமைக்கப்படுவதையும் பார்க்கலாம். இந்த அரை வட்டமும் பல முக்கோணங்களை கொண்டது. கட்டடக்கலையில் பெரும்பகுதி இந்த முக்கோணம் பயன் படுகின்றது.
[படம் 5]
அதே போல் திருகாணியின் மூல சூத்திரமும் முக்கோணம்தான். மேலும் திருகாணி மற்றும் எந்திரங்களில் பயன்படும் நட்டு போல்ட்டில் உள்ள மரைகளில் அதிகமாக முக்கோண மரைகள்தான் பயன்படுத்தப்படுகின்றது. முக்கோண மரைகளின் பயன் காலம் அதிகம் (புறவிசைகளால் உருசிதைவு குறைவாக இருக்கும்).
[படம் 6]
[படம் 7]
முக்கோணம் பற்றிய வியக்கதக்க முக்கிய செய்தி: இன்றுவரை விஞ்ஞானிகளுக்கு ஒரு சவாலாக இருப்பது பெர்முடா முக்கோணம். வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொ ரிகொ ஆகிய முன்று துறைமுகங்களை இணைத்து ஒரு முக்கோணம் வரைந்தால் கிடைக்கும் பகுதியே பெர்முடா முக்கோணம் ஆகும். இதன் வியக்கதக்க விந்தைகளால் இவற்றை பிசாசு முக்கோணம் என்றும் அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர்.
[படம் 8]

இவ்முக்கோணப்பகுதில் காணப்படும் ஆழ்கடலின் அடியில் உள்ள சக்திவாய்ந்த நீரோட்டங்களினால் இவ்வெல்லைக்குள் புகுந்த கப்பல்கள் விமானங்கள் சிறு மரகலங்கள் மாயமாய் மறைந்துவிடுகின்றன. இதுவரை 40 கப்பல்கள் 20 விமானங்கள் எண்ணற்ற சிறு மரக்கலங்கள் மறைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கான முழுமையான காரணங்கள் கண்டுபிடிக்க முடிவில்லை. பலர் பல கருத்துகளை சொல்லி வருகின்றனர். இன்று வரை காணமல் போன பொருள்களைப்பற்றிய விவரமும் தெரியவில்லை. இது விஞ்ஞானிகளுக்கு ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது. கடலுக்குள் வாழும் மனிதர்களால் இழுத்து செல்லப்படுகின்றது என்ற மூடநம்பிக்கையும் இருந்து வருகின்றது.

1872-ஆம் ஆண்டில் மேரி செலெஸ்டி என்னும் பெயருடைய ஒரு பாய்மரக் கப்பல் மறைந்த நிகழ்சியே முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. அதன் பின் நடந்த நிகழ்ச்சிகள் அதிர்ச்சியை கொடுத்துக்கொண்டு வருகின்றது.

மேலும் சிந்தனைகளுடன்
ஆ.ஞானசேகரன்.

Friday, October 2, 2009

கலந்துக் கட்டிய கதம்பம்...

கலந்துக் கட்டிய கதம்பம்...

வணக்கம்! இரண்டு வாரக் காலம் இணையம் பக்கம் வராததால் பல விடயங்கள் என் பார்வையில் படாமலே போய்விட்டது. இருந்தாலும் இந்தியா சென்றதால் நான் பார்த்த, ரசித்த, சந்தித்த பல விடயங்கள் மகிழ்ச்சியை கொடுத்தது. அவற்றையெல்லாம் உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சி. அதே போல் வேலையின் பளு மற்றும் நேரமின்மையால் சிலர் அழைத்த தொடர் இடுகையும் தொடர முடியாமல் போனதிற்கு வருந்துகின்றேன். இளமைக்கால பள்ளிக்கூட அனுபவங்களை எழுத சொல்லிய தோழி தமிழரசி எழுத்தோசை அவர்களுக்கு என் நன்றி. காலம் கிடைக்கும் பொழுது தோடர்கின்றேன். அதே போல் நண்பர் டாகடர் SUREஷ் பழனியிலிருந்து (கனவுகளே) அவர்கள் அழைத்த a,b,c,d தொடர் இடுகைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

நான் எனது சொந்த மண்ணுக்கு சென்று வர வாழ்த்துகளை அள்ளி வழங்கிய நண்பர்களையும் நினைவு கூறுகின்றேன். நண்பர் கோவி.கண்ணன் அவர்கள் எனது பத்தாண்டு மணநாள் வாழ்த்துகளை சுவரொட்டி மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.அவர்களுக்கு நன்றி!. அவற்றில் எனக்கு வாழ்த்துகள் கூறியுள்ள அணைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள். அதே போல் நண்பர் கதிர் ஈரோடு அவர்கள் வழங்கிய
[விதைப்போம் அன்பை விருதுகள் மூலம்] scrumptious blog விருதிற்கு பணிவான நன்றி.

பரந்து விரிந்துகிடக்கும் உலகில் பாரதத்தை நினைத்தால் மனதில் ஒரு மனநிறைவு வரத்தான் செய்கின்றது. பல முரண்பாடுகள் இருந்தாலும் அதையும் தாண்டி கண்ணில் படும் அபார வளர்ச்சிகளை பாராட்டாமல் இருக்கமுடியாது. ஏழ்மையின் மத்தியிலும் மனிதன் முகத்தில் மகிழ்ச்சி இருக்கின்றது என்றால் அது இந்திய நாடு என்றால் மிகையாகாது. இந்த முறை எனது ஊரை பார்க்கின்ற பொழுது தூர்ந்து போன வாய்க்கால் தூர்வாரப்பட்டிருந்தது. அந்த கட்டளை வாய்க்காலில் நீர் ததும்பி செல்லும்பொழுது தூர்வாரிய தமிழக அரசிற்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியாது. ஆனாலும் பல்லிளிக்கும் சாலைகளை பார்க்கின்ற பொழுது அந்த மகிழ்ச்சியில் கறைபடிகின்றது என்பதை என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதேபோல் நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தும் பணியிடங்களில் எந்த விதமான பாதுக்காப்பு விதிகளை கடைபிடிக்காமல் இருப்பதும் மனதை ரணப்படுத்துகின்றது. நீண்ட பெரும் நெடுஞ்சாலைகளை பார்கின்றபொழுது மகிழ்ச்சியும் நாம் வளர்கின்றோம் என்ற நம்பிக்கையும் தெரிகின்றது. திருச்சியில் ஐ டி பார்க் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழக துணை முதல்வர் மூ.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கயுள்ளார் என்ற செய்தியும் உள்ளது. 2010 முடிவில் எல்லா வேலைகள் முடிக்கப்படும் என்று எல்காட் நிறுவனம் சொல்லியுள்ளது.


சங்கம் வளர்த்த மதுரையில் பதிவர்கள் சந்திப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. நண்பர்களுடன் பழகி பேசும் வாய்ப்புகள் கிடைத்தது. சீனா ஐயாவை பார்க்க முடியாமல் போனது ஒரு ஏமாற்றமே. தருமி ஐயாவிடம் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. மேலும் அனைத்து நண்பர்களுடம் பேசியதில் இன்னும் அந்த மகிழ்ச்சியின் ஈரம் காயவில்லை. சந்திபின் புகைப்படங்கள் தருமி ஐயா தளத்தில் காணலாம். மேலும் புகைப்படங்களை பார்க்க சுட்டியை தட்டவும் மதுரையில் ஒரு சந்திப்பு அறிய புகைப்படம். சந்திப்பு 29-09-2009 ஞாயிற்று கிழமை மாலை நான்கு மணியளவில் அமெரிக்கன் கல்லூரியின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகில் நடைப்பெற்றது.

சந்திப்பின் காணோளி பகிர்வு:



புகைப்பட காட்சியமைப்பு: