_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Monday, February 16, 2009

மன்னிக்க மாட்டாயா?.... கேட்கதூண்டும் காலமிது!.....

மன்னிக்க மாட்டாயா?.... கேட்கதூண்டும் காலமிது!.....
வீடுவரை உறவு, வீதிவரை மனைவி...
காடுவரை பிள்ளை,.. கடைசிவரை யாரோ?.. -கவிஞர் கண்ணதாசனின் வரிகள்......
கடைசிவரை பிள்ளை வருவது இருக்கட்டும், உயிர் உள்ளவரை கூடவே இருப்பவள் அது மனைவியாகதான் இருக்கும், இது மனைவிக்கும் பொருந்தும். இந்த கணவன், மனைவி உறவு என்பது பல பந்தங்களை உருவாக்கும் உறவாகதான் இருக்கும். இதுபோகட்டும் இந்த உறவுகளில் உள்ள மனக் குழப்பங்களைதான் வருடிவிட பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.

என்னுடன் வேலைப் பார்க்கும் நண்பர் பேச்சுவாக்கில் உங்கள் வீட்டு தொலைப்பேசி எண் கொடுங்கள் உங்கள் மனைவியிடம் உங்களை பற்றி சொல்லி வைக்கவேண்டும் என்று எல்லொரையும் போல கேட்டார். அதற்கு நான் அதுவும் சரி நானும் என்வீட்டு எண்ணை தருகின்றேன், நீங்களும் உங்கள் வீட்டு எண்ணை கொடுங்கள்,... ஒரு மணி நேர அவகாசம் பொய்யான தகவல்களை சொல்லிப் பார்க்கலாம் என்றேன், நண்பர் சிறிது ஆடிப் போய்விட்டார். மேலும் இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று விலகிவிட்டார்.. ஆனால் அவர் மனதில் ஒரே குழப்பம் வீட்டுக்கு சென்றதும் அவர் மனைவியிடம் நடந்ததை சொல்லி கேட்டுள்ளார். அதற்கு அவர் மனைவி நம்பும்படி இருந்தால் நம்பிதானே ஆகவேண்டும் என்று சொல்லியதும் அவருக்கு மேலும் குழப்பமாக இருந்தது. மறுநாள் அவர் மனைவிடம் கேட்டதை என்னிடம் சொல்லி, எப்படிதான் உண்மையாக இருந்தாலும் இந்த மனைவிமார்கள் நம்பிக்கை இல்லாமல் இருக்கின்றனர் என்று கூறினார். அப்போது நான் அவரிடம் சில விவாதங்களை சொன்னேன், நம்பிக்கை என்பது மனைவி கணவனிடமோ, கணவன் மனைவியிடமோ இருப்பது காலத்தின் கட்டுபாடாகதான் எனக்கு தோன்றுகின்றது. இந்த நம்பிக்கையை வைத்துக் கொண்டு எவ்வளவு காலங்கள் கட்டியாள முடியும். இப்படிப்பட்ட பொய்யான தகவல்களினால் தகற்ககூடிய இந்த நம்பிக்கையால் என்ன பயன் இருக்கமுடியும். நம்பிக்கை என்பது வேண்டும்தான் ஆனால் அந்த நம்பிக்கை மட்டும் வைத்து என்ன சாதிக்க முடியும். இந்த கணவன் மனைவி உறவில் மன்னிப்பு என்ற ஒரு மருந்து இருந்தால் நம்பிக்கைக்கு உரமாக இருக்கும். இந்த உறவுகளில் நம்பிக்கையுடன் மன்னிக்கும் பழக்கம் இருக்குமாயின் எத்தனை சென்மங்களாயினும் உறவில் பிரிவில்லை என்பதுதான் என்வாதமாக இருந்தது.

மன்னிப்பார்கள் என்பதற்காக தவறுகள் செய்யலாம் என்று அர்த்தமில்லை. பொய்யான தகவல்களாலும், புரிதலின் தவறுகளினாலும் உருவாகும் பிரிவுகள் இந்த மன்னிப்பால்தான் மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்பதுதான் என் வாதமாக இருக்கும். அதற்காக நம்பிக்கை வேண்டாம் என்று சொல்ல வரவில்லை எல்லா உறவுகளின் நம்பிக்கை மன்னிக்கும் பண்பினால் உருவாக்கப்பட வேண்டும் எனபதே என் கருத்தாக வைக்கின்றேன். அதன்பின் உங்கள விருப்பம் விஜய்காந்த் (திரைப்படம்) பாணியில் தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்றால், உறவுகளை நீதிமன்றத்தில்தான் சந்திக்கவேண்டும். நீதிபதியிடம் வைக்கும் நம்பிக்கையை உறவுகளிடம் வைத்து மன்னித்தால் காலம் நம் கைகளில்......!

இயக்குனர் பாக்கியராஜ் சின்னவீடு திரைப்படத்தில் " பொதுவா ஆம்பளங்க உண்மையில் நல்லவங்க, சமயம் கிடைச்சா சங்கதில வல்லவங்க" என்னை பொருத்தவரை இந்த வரிகளில் சமயம் என்பது பெண்ணால் எற்படும் சூழல்கள் என்றுதான் கூறுவேன். இதில் பெண்ணுக்கு ஆணால் ஏற்படும் சூழல் என்பதும் பொருள்தானே!... இதில் மேற்கூறிய நம்பிக்கையில் மன்னிப்பு என்ற நிலை இருந்தால் குழப்பங்கள் இல்லாமல் போய்விடும்.

நான் திருமண வயதில் இருக்கும்போது நண்பர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கையில் ஒரு விவாதம் வைக்கப்பட்டது. ஒரு பெண் தான் சூழ்நிலைக் காரணமாக தவறிவிட்டேன் இப்போது அதற்காக வருந்துகின்றேன். இனிமேல் என் திருமணத்திற்கு பின்னும் எந்தவித தவறுகள் செய்யமாட்டேன் என்று கூறுகின்றாள் . இந்த பெண்ணை திருமணம் செய்ய யார் முன்வருவார்கள் என்பதுதான் வாதம்....... உங்களிடத்தில் இந்த விவாதம் வந்தாள் நீங்கள் கூறும் கருத்து என்னவாக இருக்கும்? நீங்கள் அவளை திருமணம் செய்வீர்களா?..... இந்த விவாத அடிப்படையில் நான் என் கருத்தாக அடுத்த பதிவில் கூறுகின்றேன்..

2 comments:

+Ve அந்தோணி முத்து said...

அன்பு சகோதரரே,

மிக அருமையான பதிவு.

எழுத்திலும்..,

அதைத் தாண்டி சிந்தனையிலும்..,
மிகுந்த முதிர்ச்சி தெரிகிறது.

தொடர்ந்து எழுதுங்கள்.

அடுத்த பதிவில் உங்களின் கருத்துக்காகக் காத்திருக்கிறேன்.

நன்றிகளுடன்....

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

//அந்தோணி முத்து said...
அன்பு சகோதரரே,

மிக அருமையான பதிவு.

எழுத்திலும்..,

அதைத் தாண்டி சிந்தனையிலும்..,
மிகுந்த முதிர்ச்சி தெரிகிறது.

தொடர்ந்து எழுதுங்கள்.

அடுத்த பதிவில் உங்களின் கருத்துக்காகக் காத்திருக்கிறேன்.

நன்றிகளுடன்....

மனமார்ந்த வாழ்த்துக்கள்//

உங்கள் வாழ்த்துகள் என்னை மகிழச்செய்தது. உங்களின் வருகைக்கும் வாழ்த்துதலுக்கும் நன்றிகள் கோடி!...