_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, February 3, 2009

முத்துகுமாரர்கள் உருவாக்கப் படவேண்டும் மா?...

முத்துகுமாரர்கள் உருவாக்கப் படவேண்டும் மா?...
கடந்த 25ஆண்டுகாளாய் அனலை கக்கும் எரிமலையாய், தமிழனை பூண்டோடு அழிக்க நினைக்கும் சிங்கள அரசின் கோரத்தாண்டவம்.... கொடூரமான கொலைகள், மற்றும் பள்ளிசிரார்களை சுட்டுத்தள்ளும் சிங்கள ராணுவம், கற்பழிப்புகள் என இன்று மட்டும் இல்லை ஒரு தலைமுறைகளாக நடந்து வருகின்றது..

சிங்கள ராணுவத்திற்கெதிராக பொதுவாக தமிழனின் பாதுகாவலாக புலிகளின் படைகள் சன்டையிட்டு வருகின்றது. இன்று இலங்கை அதிபர் ராஜபக்சே இன்னும் சிலநாட்களில் புலிகளை முழுமையாக அழித்துவிடுவோம் என்று போரை தீவிரப்படுத்தியுள்ளார். போரில் அப்பாவி தமிழ் மக்கள் பலியாவதுதான் முத்துகுமாரை உருவாக்கி உள்ளது... அதுமட்டுமில்லை தமிழ்நாட்டு அரசியலில் இலங்கை தமிழனை சொந்த அரசியல் லாபத்திற்காக ஒப்புக்கு ஒப்பாரி வைப்பதும், இலங்கை அரசுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சியும் கொடுத்து சும்மானாச்சிக்கும் போர் வேண்டாம் என்று மெளனம் சாதித்த இந்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்கம் எண்ணத்தில்தான் முத்துகுமாரர் நடந்த சம்பவம்...

முத்துகுமார் தீகுளிப்பு நடந்து முடிந்து விட்டது.... நம்மால் தடுக்க முடியாமல் போனது நிச்சயம் நமக்கு ஒரு தலைகுனிவுதான். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகமான சாஸ்திரி பவன் முன்பு முத்துக்குமார் தீக்குளிக்கும் முன் துண்டுப்பிரசுரம் விநியோகித்த பின்னர்தான் தான் வைத்திருந்த மண்ணெயில் தீக்குளித்துள்ளார்...

(முத்துகுமாரின் விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... சுட்டி சுட்டவும்) நான்கு பக்கங்கள் எழுதிய முத்துகுமாரால் ஒரு நிமிடம் சிந்தித்து தவிற்த்திருக்கலாம்.... அல்லது பிரசுரம் படித்தவர்களாவது காப்பாற்றியிருக்காலாம் என்றே தோன்றுகின்றது. மாறாக அரசியலாக்கி தினம் கொள்ளப்படுகின்றார் என்பதை எண்ணும் போழுது வேதனைதான் மிச்சம். என்னை பொருத்தவரை தமிழனுக்கு வீரன் தேவையே ஒழிய தியாகிகள் தேவையில்லை.. முத்துக்குமாரின் இழப்பு உண்மை தமிழனுக்கு ஒரு பேரிழப்புதான். போராட்டத்திற்கு இதுதான் வழியா? தமிழா சிந்தித்து பார்? இன்று நாம் இழந்த ஒரு முத்துகுமார் போதும்..... இலங்கை போரில் தமிழனின் உயிர்கள் சூரையாடப்படுகின்றன. அவனுக்கு உயிர்கள் தேவையில்லை வீரர்கள்தான் தேவை.. தொடரும் முத்துகுமாரர்கள் நிச்சயம் தேவைப்படாது...

இலங்கையில் போர்நிறுத்தம் வலியுறுத்தி விஷம் குடித்த மாணவர்களுக்கு சிகிச்சை
டவரிலிருந்து குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டியவர் கைது நன்றி தினமலர்

இளஞர்களே! போராடுங்கள்... ஒன்றுபடுங்கள்! முத்துகுமாரால் கொடுக்கப்பட்ட தீ உங்களிடம் உள்ளது, அந்த தீ தமிழனின் ஒற்றுமைக்கும் போராட்டத்திற்கும் பயன்படுத்த படவேண்டுமேயொழிய உயிரை விடுவதற்கு இல்லை.... முத்துக்குமாரின் இந்த எண்ணம் ஒரு தியாகம் என்று சொல்லி பல முத்துக்குமார்களை உருவாக்க வேண்டாம்.. தினம் செத்து மடியும் இலங்கை தமிழனுக்கும் தியாகிகள் தேவையில்லை... போராடும் வீரர்கள்தான் தேவை.. இந்த போராட்டம் பத்தாது சிந்தித்து கலம் இறங்குகள்! மொத்த இந்திய அரசை திசைதிருப்பி போரை நிறுத்துங்கள்... காலம் கடந்துவிட்டோம் மிச்சமுள்ள உயிர்களையாவது காப்பாற்றலாம்... தயவுசெய்து முத்துக்குமாரின் மரணசாசனத்தில் அரசியல் நடத்தாதீர்கள்..
என்னால் தீகுளிப்பை ஞாயப்படுத்தவோ, இல்லை கொச்சப்படுத்தவோ முடியாது... இன்று மரணதில் போராடும் இலங்கை தமிழனுக்கு நம்முடைய ஒன்றுப்பட்ட போராட்டம்தான் தேவையே இன்றி உயிர்கள் இல்லை.... தியாகிகளும் தேவையில்லை..... மேலும் முத்துக்குமாரர்கள் உருவாகவேண்டாம், உருவாக்கப்பட வேண்டாம் என்பது தமிழர்களிம் எண்ணம்....

மக்களே யோசியுங்கள்! முத்துக்குமார் எழுதிய கடைசிக்கடிதம் நன்றி நக்கீரன்

புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
உலகை வேரோடு சாய்ப்போம்- பாரதிதாசன்

அன்புடன் ஆ.ஞானசேகரன்

0 comments: