_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, January 29, 2009

வானத்திலே திருவிழா.. சந்திரயான் -1 விண்கலம் 100வது நாள் வெற்றி விழா...

வானத்திலே திருவிழா.. சந்திரயான் -1 விண்கலம் 100வது நாள் வெற்றி விழா...
தீபாவளி என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் நினைவில் வருவது பட்டாசுகள்... அதிலும் ராக்கட் வெடி என்றால் அதில் ஒரு தனி ஆசைதான், அப்பாவிடம் அடம்பிடித்து பெரிய அளவில் உள்ள ராக்கட் வெடிதான் வேண்டும் என்று வாங்கிவிடுவோம். "அப்பாடி பெரிய ராக்கட்" அருகில் இருக்கும் நண்பர்கள் அனைவரையும் கூப்பிட்டு அந்த ராக்கட் விட தயாராகுவோம். பழைய சோடாப்பாட்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு பாட்டிலை நிறுத்தி வைத்து அதில் அந்த ராக்கட்டை சரியாக நிறுத்தி நண்பர்கள் கோசமிட நெறுப்பை பொருத்தி ராக்கட்டை செலுத்தியதும் ஒரே மகிழ்ச்சிதான். சிலசமையம் ராக்கட் பக்கத்தில் உள்ள கமலா அக்கா விட்டுக்குள் சென்றுவிடுவதும் பின் கமலா அக்கா எங்களை விரட்டுவதும் இன்னும் பசுமையா இருக்கின்றது.....

என்னங்க இப்படி விட்ட வெடி ராக்கட்கே இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்த நம்மால் நம்ம அவ்வை பாட்டியை குசேலம் விசாரிக்க அனுப்பிய சந்திரயான் -1 100வது வெற்றியை மகிழாமலா இருக்கமுடியும்.. இந்தியாவிற்கும் இந்தியனுக்கும் இது ஒரு மைல்கல்தான்... நான்கு வருடங்கள் உழைபிற்கு பின் கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி சந்திரயான்-1 விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான் -1 வெற்றிகமாக 100வது நாளாக தனது பணிகள் செய்துகொண்டே வருவது நமது விஞ்ஞானிகளின் உழைப்பும் நம்பிக்கையும்தான் என்றால் மிகையாகாது.


நான்கு வருடங்கள் உழைபிற்கு பின் தன் குழந்தை சந்திரயான் -1 வின்னில் செலுத்தும் பொழுது நம் விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பும். அதன் வெற்றிக்கு பின் அவர்கள் கண்ட மகிழ்ச்சியும் என்னவென்று சொல்ல..... கிழே உள்ள சுட்டியில் காணோளி உள்ளது சுட்டி பார்க்கவும்>>>>> அப்படி இப்படி உள்ள வீடியோவை மெனக்கட்டு உற்காந்து பார்க்கும் பொழுது இதை பார்க்க மாட்டோமா? பார்க்கனும்ங்க.... ம்ம்ம் பார்க்கனும் சுட்டியை சுட்டுங்க>>>>

Launched on Oct. 22, 2008 from SDSC SHAR, Sriharikota, INDIA

India's First Mission to Moon

Lunar Flythrough of Chandrayaan-1

Lunar Flythrough of Chandrayaan-1

ம்ம்ம்ம்ம்ம் அம்மாம்தூரம் உள்ள நம்ம அவ்வை பாட்டியை குசேலம் விசாரிக்க சென்ற நம்மால்... இங்கே நம் கக்கத்தில் இருக்கும் நம் சகோதரனின், சகோதரியின் குசேலம் விசாரிக்க மாட்டோமா? ராக்கட் விடவேண்டாம்ங்க கரம் நீட்டினாலே போதும். சொந்த அரசியல் ஆதாயத்திற்காக இன்னமும் இலங்கை தமிழின் துயர் துடைக்க உங்கள் நாடகத்தை நிறுத்தி விட்டு கரம் கொடுங்க போதும்.. அதைதான் அவர்கள் எதிர்ப்பார்க்கின்றார்கள்.....

புதியதோர் உலகம் செய்வோம்! கெட்ட போரிடும்
உலகை வேரோடு சாய்ப்போம்- பாரதிதாசன்

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,

ஆ.ஞானசேகரன்.

நன்றி தினமலர்:
சந்திரயான் -1 விண்கலம் 100வது நாள் வெற்றி விழா
ஜனவரி 29,2009,12:54 IST
பெங்களூரு : கடந்த வருடத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி பதிவேட்டில் ஒரு மைல்கல்லாக அமைந்ததது , சந்திரயான்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது . கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி சந்திரயான்-1 விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்-1 விண்கலம் நிலவில் தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்து இன்றுடன் வெற்றிகரமாக 100வது நாள் ஆகிறது. இதை கொண்டாடும் வகையில் இந்தியா மற்றும் சில வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 100 விஞ்ஞானிகள் இன்று பெங்களூருவில் நடக்கும் வெற்றி விழாவில் கலந்து கொண்டு ஆலோசனை நடத்துகின்றனர். விஞ்ஞானிகள் சந்திரயான் -1 விண்கலம் சேகரித்த முக்கியத் தகவல்கள் குறித்து ஆய்வு செய்யவிருக்கிறார்கள். இத்தகவலை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார். சந்திரயான்- 1 விண்கலத்தினால் விண்ணில் இறக்கப்பட்டுள்ள ' மூன் இம்பாக்டர் பிரோப் ' நிலவின் வியத்தகு படங்களை அனுப்பியுள்ளது. இதுவரை யாருமே கண்டிராத கோணங்களில் புகைப்படங்களை ' மூன் இம்பாக்டர் பிரோப் ' எடுத்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் புகைப்படங்கள் தற்போதைக்கு இஸ்ரோவிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சந்திரயான் -1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் : குழந்தை சந்திரயான் -1 நலமாக இருக்கிறது. அத்துடன் செலுத்தப்பட்ட 11 கருவிகளும் சிறப்பாக இயங்குகின்றன. இந்தியாவின் இந்த சாதனை பயணம் நிலவு குறித்த இதுவரை புரியாமல் இருந்த புதிரை நீக்கி, விசித்திரமாக தோன்றியவற்றிற்கு விளக்கம் அளிக்கும். இவ்வாறு அவர் கூறினார். இன்று பெங்களூருவில் நடைபெறவிருக்கும் ஆலோசனை கூட்டத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் நாசா விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஈசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் சில விஞ்ஞானிகளும் கலந்து கொள்வார்கள் என தெரிகிறது

0 comments: