_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, November 30, 2008

நம்மை வெல்ல இங்கே யாருமில்லை!..

நம்மை வெல்ல இங்கே யாருமில்லை!..

மும்பையில் நவம்பர் 27 முதல் நவம்பர் 29 வரை நடந்த தாக்குதல்கள் சாதாரணம் இல்லை, இது ஒரு யுத்தம். இந்த 62மணி நேர தாக்கிதலில் 162 பேர் பலியாகியுள்ளனர், 239 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த யுத்தத்தில் 14 போலிஸ் அதிகாரிகளும் இருவர் தேசிய பாதுக்காப்பு படை சேர்தவர்கள் பலியாகியுள்ளனர். சுயநலம் பாராது தன் உயிரையும் கொடுத்து போராடிய அதிகாரிகள் அனைவருக்கும் இந்தியனின் வணக்கங்கள்!......

மும்பையில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இந்திய பாதுக்காப்பு துறைக்கு ஒரு சாவலாக அமைந்துவிட்டது. உளவுதுறையின் மெத்தன போக்கும் கவனக்குறைவும் தெரிகின்றது. உளவுதுறை நவீன உத்திகள் கையாளவேண்டிய காலகட்டதில் உள்ளது.... இனி வரும் காலத்தில் முறைப்படுத்தாமல் விட்டால் இந்தியா மறுபடியும் அடிமை சாசனம் எழுதவேண்டிவரும்.

இந்த மூன்றுநாள் போராட்டத்தில் தன்நலம்பாராது போராடிய என்.எஸ்.ஜி. கமாண்டோக்களையும், பாதுக்காப்பு படைனருக்கும் ஒவ்வொரு இந்தியனின் வணக்களும் பாராட்டுகளும்... இந்தியா என்ற மாபெரும் தொடர் நாடகத்தில் உங்களின் பாத்திரம் பெருமையை தருகின்றது. நாங்கள் ஏற்ற பாத்திரத்தின் கவனக்குறைவினால் நல்ல அதிகாரிகளை பலியிட வேண்டியதாயிற்று. இந்த போராட்டத்தில் பலியான அதிகாரிகளின் குடும்பதினருக்கு எங்கள் அனுதாபத்தை தெருவிக்கின்றோம்...

இனிவரும் காலங்களில் கடுமையான சட்டங்களும் அதிரடி நடவடிக்கையும் வேண்டும் என்பதை இந்தியாவும், அதிகாரிகளும் புரிந்துக்கொள்ள வேண்டும். சட்டம் மட்டும் போதுமான தீர்வாகாது. ஒவ்வொரு இந்தியனும் தான் ஏற்க்கும் பாத்திரத்தின் பொறுப்புணர்வை புரிந்த்துக்கொள்ள வேண்டும். பயங்கரவாதியின் பொறுப்புணர்வில் பாதியளவு நமக்கிருந்தால் இந்த தாக்குதலை நாம் சந்திக்க வேண்டி இருக்காது. பயங்கரவாதிகளை எதிர்த்து எந்த பலனையும் எதிர்பாக்காமல் போராடிய வீரனின் பாத்திர பொறுப்புணர்வு அரசியல் தலைவர்களுக்கு இருந்திருந்தால் இந்த பயங்கரவாதம் வந்திருக்காது என்பது உண்மை. போடா போன்ற சட்டங்களை சுயநலத்திற்க்கு பயன்படுத்துவதும் பொறுப்பின்மையை சொல்லுகின்றது.

இதுபோன்ற எல்லைதாண்டிய பயங்கரவாதம் தடுக்கப்பட வேண்டும். இதை ஒடுக்குவதே கொள்கையாக கொண்ட புலனாய்வு மற்றம் உளவுத்துறை ஏற்படுத்தவேண்டும். இவர்கள் அரசியல் தலையிடு இல்லாமல் சுயமாக வேலைச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு இந்தியனும் சாதி இனம், மதம் பாராது பொறுப்புணர்வுடன் நடந்துக்கொண்டால் நாளை இந்தியா நம் உள்ளங்கையில்.....

வாழ்க இந்தியா!
வாழிய மணிதிருநாடு!....

ஆ.ஞானசெகரன்.

1 comments:

இரசிகன் said...

http://thiraii.blogspot.com/ இந்த சுட்டிக்கும் உலா வரலாம்.