_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Sunday, November 16, 2008

ஊக்கப்படுத்தி உச்சாகமாகலாம்...

ஊக்கப்படுத்தி உச்சாகமாகலாம்...
என்னடா வாழ்கை கருவேலங் காட்டில்
புகுந்த வண்ணத்து பூச்சிபோல- என்றோ எங்கேயொ கேட்ட கவிஞனின் வார்த்தைகள்(கவிஞர் அறிவுமதி என்று நினைக்கின்றேன்)

ஒவ்வொருவரின் வாழ்கையிலும் வெவ்வேறு பிரச்சனைகள். பிரச்சனையே வாழ்க்கையாகாது, வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும்...
வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோரும் வேதனை இருக்கும் ........
..... வந்த துன்பம் எது வந்தாலும்
நடக்கும் வாழ்வில் நிம்மதி தேடு!... (கண்ணதாசனின் வரிகள்)
வாழ்வியியல் பற்றி பல அறிஞர்களும் கவிஞர்களும் சொல்லியவை கோடிகள். என்னதான் நாம் நிதானமாக இருந்தாலும் நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகள், மற்றும் நண்பர்கள் பொருத்துதான் நம்மனநிலையின் அமைப்பும் காரணமாக அமையும். இப்படி காரணிகள் பல இருந்தும் நம்மை நாமே ஊக்கப் படுத்துவதினாலும், நண்பர்கள் ஊக்கத்தினாலும் ஒவ்வொரு நாளும் உச்சாகமாக இருக்க முடியும்.

என்னுடன் வேலை செய்யும் நண்பன் ஒருவன், பார்க்க நல்ல அழகு என்றே சொல்லலாம். காலையில் வெலையிடத்தில் சந்திக்கும் போது வணக்கத்துடன் நல்ல புன்முருவல் கொடுப்பார். பின் என்னை தொட்டு இந்த சட்டையில் நீங்கள் பொருத்தமாக இருக்கின்றீகள் என்று காலரை சரிசெய்து விடுவார். உண்மையில் சட்டை எனக்கு பொருத்தமாக இருக்கோ இல்லையோ! என்னை உச்சாக படுத்தியது. வேலையிடத்தில் சின்ன சின்ன நல்ல வார்த்தைகள் புத்துணர்வை கொடுக்கும். இப்படி ஒருவரை உச்சாக படுத்த விலையேதும் கொடுக்கவேண்டியது இல்லை, நல்ல மனம் மட்டுமே போதும்.

உன்னால் முடியும் என்று சொல்லும் போது, நம்மால் முடியும், என்னால் முடியும் என்ற மந்திரமும் உள்ளடங்கியே இருக்கின்றது. எனவே நீங்கள் மற்றவரை ஊக்கப் படுத்துவதனால் நீங்களும் உச்சகமாக இருக்கின்றீர்கள் இதுதான் வாழ்வியியலின் எதார்த்தம். உங்களை ஊக்கப்படுத்திய வார்த்தைகளை உங்கள் நண்பர்களுக்கும் கொடுங்கள். உங்களின் நண்பனின் உச்சாகம் உங்களையும் மகிழ்விக்கும்.

ராணுவத்தில் வீரர்கள் வட்டமாக நின்று ஒருவர் முதுகை ஒருவர் அமுக்கி கொடுத்து இளப்பாற்றுவார்களாம். இதைதான் நாம் மற்றவர்களுக்கும் மற்றவர் நமக்கும் கொடுக்கவேண்டும். வீண்புகழ்ச்சி ஒருவனை பாதாளத்தில் கொண்டுபோய் விடும் என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே போல் சின்ன சின்ன புகழ்ச்சி வார்த்தைகள் நம்மையும் நம்மை சார்ந்தவர்களையும் உச்சாக படுத்தும் என்பதும் உண்மையே!........

ஊக்கப்படுத்துங்கள்! உச்சாகமாக இருங்கள்!

மீண்டும் ஒரு முக்கிய பிரச்சனையுடன் சந்திக்கும்,
ஆ.ஞானசேகரன்

0 comments: