_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, November 4, 2008

பசியும்! ருசியும்!.....

பசியும்! ருசியும்!.....

பொதுவாக உயிர்களுக்கு தன்னை தனக்கு ஞாபகப் படுத்துவதே இந்த பசிதாங்க. பசியில்லனா வாழ்வியலில் ருசியேதுங்க!......
பசியும் சுண்டல் ருசியும் போனால்!...
பக்தியில்லை பசனையில்லை- சுத்தமான
சோம்பேரிகளின் வேசத்திலே -----என்று சவுக்கால் அடித்த வரிகளை சொன்னவன் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்,....

பசி மனித உடலின் ஆரோக்கியம்! பசி சக்தியின் வேண்டுகோள்! பசி என்பது அமிலங்களின் எரிச்சலும் தூண்டுதலும். மனிதன் உயிர்வாழ சக்தி தேவைப் படுகின்றது, அந்த சக்தி உணவிலிருந்து எரித்து எடுத்துகொள்ளப்படுகின்றது. அந்த உணவை மனிதன் சமையல் செய்து உண்பதுதான் அவனுக்கு தேவை ருசி.

சமையல் என்பது உணவுப் பொருளை சுவை, தோற்றம், ஊட்டச்சத்துக்கள், போன்றவற்றை தான் விரும்பும் வைகையில் வெப்பத்தை பயன்படுத்தி மாற்றுவதே சமையல் என்று அழைக்கின்றோம்... வெப்பம் பயன்படுத்துவதன் மூலம் கிருமிகளும் அழிக்கப் படுகின்றது.

சமையலுக்கு வெப்பம் அவசியம் தேவைப்படுகின்றது. இந்த வெப்பத்தின் அளவை பொருத்து சமையலின் வகைகள் மற்றும் சமையலின் ருசிகள் நிர்ணயக்கப் படுகின்றது. இப்படி வெப்பத்தை பயன் படுத்துதல் முறையில் சமையலின் வகைகள் கீழ்கண்டவாறு சொல்லப்படுகின்றது.
1.ஆவியில் வேகவைத்தல்
2.நீரில் வேகவைத்தல்
3.தழலில் சுடுதல்
4.பாத்திரத்திலிட்டுச் சுடுதல்
5.வறுத்தல்
6.காய்ச்சுதல்
7.பொரித்தல்
8.வெதுப்புதல்
_ இப்படி வெப்ப அளவை பொருத்துதான் சமையல் வகைப் படுத்தப்படுகின்றது. இந்த வெப்ப நிலை சமன் படுத்த நீர் மற்றும் எண்ணெய் பயன் படுத்துகின்றோம்.... இப்படி வகைப்படுத்தப்பட்ட சமையல் ருசியும் மாறுபடுகின்றது.

வெண்ணெய் மற்றும் நெய்க்கு ருசி கிடையாது. இவற்றின் வாசனை நம்மை சாப்பிட தூண்டும் (இது வேதியியல் கோட்பாடு) அதுபோல் சமையல் எண்ணெய் மற்றும் மாமிச கொழுப்பிற்க்கு ருசி என்பது இல்லை இதன் வாசனை ருசிப்பதுபோல தோன்றும். நாவிற்க்கு ருசியை தூண்டுவது நிறம் மற்றும் வாசனை..... அண்ணாசி பழத்தின் வாசனை நல்ல ருசியின் உணர்வை கொடுக்கும் ஆனால் சாப்பிட்டால் எதிர்பார்ப்பு குறையும்.

சமையல் வகைகளை எண்ணெய் முக்கிய இடத்தில் உள்ளது. உதாரணமாக ஒன்றை எடுத்துக்கொள்வோம்.. கோதுமை

கோதுமையை நீரில் வேகவைத்தால்: கோதுமை சோறு நிலையடையும் நீரில் சீராக வெப்பம் உயர்ந்து 100 C* அடையும் (நீரில் பூரி சுட முடியாது குறைந்த வெப்பத்தில் மாவு கூழாகும் பூரிக்கு 100 C* மேல் வெப்பம் தேவை)

ஆவில் வேகவைத்தல்: நீரை கொதிக்கவிட்டு அதன் மேல் துணியில் வேடுக்கட்டி அதன் மேல் வேகவைப்பது இதற்கு புட்டு நிலை என்பர் நீர் அதிகம் சேராமல் ஆனால் வெப்பம் 100 C* ல் வேகவைப்பது( இதில் சோறு நிலை அடையாது ஏனனில் 100*C க்கு குறைந்த வெப்பநிலையில் இருப்பதில்லை)

பாத்திரத்தில் இட்டு சுடுதல்: கோதுமை மாவை தட்டி நெருப்பின் இடையில் பாத்திரம் வைத்து தட்டிய மாவை சுடுதல், இது சப்பாத்தி மற்றும் ரொட்டி நிலை 100 C* மேல் சமசீர்ரற்ற வெப்பநிலையில் சுடுதல்( இப்படி சுடும் உணவு கொழுப்பற்ற ஆரோக்கியமான உணவாகும்)

வருத்தல்: வருத்தல் பொதுவாக எண்ணெய் சிறிது பாத்திரத்தில் இட்டு சமைப்பது நீரும் சேர்ப்பதால் 100 C* மற்றும் கொஞ்சம் அதிகமான வெப்பநிலையில் சமையல் செய்வது( இதில் கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் பலருக்கு நல்லது இல்லை ஆனால் எண்ணெய் வாசனை சாப்பிட தூண்டும்)

பொரித்தல்: கொதிக்கும் எண்ணெய்யில் நேரடியாக இட்டு சமைத்தல் (பூரி நிலை.. மொரமொரப்பான உணவுப் பொருள்) 100 C* க்கு அதிகமான அதே வேலையில் வழவழப்பான திரவத்தில் சமையல் செய்வது....

மேற்கண்ட விளக்கங்கள் மூலம் சமையல் என்பது வெப்பத்தில் அளவு மற்றும் நீரின் அளவை பொருத்து மாறுப்படுகின்றது என்பதை கண்டோம். இது ஒரு அறிவியல் கட்டுறை இல்லை அனுபவ விளக்கம் மட்டுமே.

பசி ருசியறியாது என்பர் உண்மைதான், அதிக பசித்த ஒருவன் சாப்பிடும்போது ருசி தெரிவதில்லை அது ஒரு சில வினாடிகள்தான்.. அதன் பின் உப்பில்லதது தெரிந்துவிடும்.

ருசி மற்றும் பசி சார்ந்த பொன்மொழிகள்
1.உப்பில்லா பண்டம் குப்பையிலே
2.உப்பிட்டவரை உயிருள்ளவரை நினை
3.வசதிப் படைத்தவன் தரமாட்டான் வயிறுப் பசித்தவன் விடமாட்டான்
4.சாண் வயிற்று உணவில்லை எனில் இந்த சகத்தினை அழிப்போம்!
5.பசி ருசியறியாது...
இன்னும் பல..............

இதற்கு தொடர்புடைய மற்றொரு பதிவு

0 comments: