_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, October 21, 2008

நலம்பெறுமா? நல்லீணக்கம்!....

நலம்பெறுமா? நல்லீணக்கம்!....

"யாதும் ஊரே யாவரும் கேளீர்! "

நெற்றியில் குறிப்பார்த்து துப்பாக்கி முனையில் சுட்டெரிக்கும் கணியன் பூங்குண்றனாரின் வைரவரி இது. நாடு, இனம், மொழி, மதம் கடந்து மனிதனைக் காட்டும் முத்தான வரி இது. ஆஆஆஆஆ என்று கதரும் மனிதத்தை காக்கும் மகிமை வரியல்லவா இது.

நான் வசிக்கும் ஊர் மலைக்கோட்டை நகரம் திருச்சினாப்பள்ளியிலிருந்து 20கி மீ தூரதில் இருக்கும் அண்ணாநகர் திருச்சி-26.(இன்னும் கூகுல் மேப்பில் இடம்பெறவிலை). நான் வசிக்கும் ஊரைப்பற்றி சொல்வதிற்க்கு காரணம் உண்டு.

ஒருமுறை டாக்டர் புரட்சி தலைவர் M G ராமச்சந்திரன் அவர்கள் முதலமைச்சராய் இருந்த சமயத்தில் ரஷ்யா சென்றாராம் அங்கு அவர் பார்த்த நகரத்தின் பெருமைதான் நான் வசிக்கும் அண்ணாநகர். அவர் பார்த்த நகரத்தில் எல்லா தர மக்களும் ஒரே இடத்தில் ஏற்ற தாழ்வின்றி குழுமி வசிக்குபடியான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. அதை பார்த்ததும் நம்நாட்டில் இதேபோல் ஒரு நகரம் அமைக்க வேண்டும் என்று கனவில் ஏற்ப்பட்ட ஊர்தான் நான் வசிக்கும் அண்ணாநகர்.

தென்கிழக்கில் பாரத் மிகுமின் தொழிற்சாலை, கிழக்கில் துப்பாக்கித் தொழிற்சாலை, வடகிழக்கில் ஹெவி அலாய் பெனிரேட் தொழிற்சாலை, வடக்கில் பன்னாட்டு விமான நிலையம், வடமேற்கில் பொன்மலை ரயில்பெட்டி தொழிற்சாலை என்று புடைசூழ அமைந்த ஊர்தான் நான் வசிக்கும் அண்ணாநகர் திருச்சி-26. 1984 ம் ஆண்டு டாக்டர் புரட்சி தலைவர் M G ராமசந்திரன் அவர்களால் தமிழ்நாட்டு வீட்டு வசதித் துறையினால் துவங்கப்பட்ட ஊர்தான் அண்ணாநகர் திருச்சி-26.

அப்படி என்னதான் நான் வசிக்கும் ஊரின் பெறுமை. இது ஒரு கனவு நகரம்... மக்களின் மனிதநேயம் உருவாக்கும் பட்டரை. இங்கு கிறிஸ்துவ தெரு, முஸ்லீம் தெரு, இந்துக்கள் தெரு என்பது கிடையாது. இங்கு பறையன் தெரு, பல்லன் தெரு, கள்ளன் தெரு, நாடார் தெரு என்று சாதிப் பேர் சொல்லும் சாக்கடை கிடையாது. இங்கு மேலோர் கீலோர் என்ற பாகுபாடுயின்றி ஓரிடத்தில் வசிக்கும்படி அமைக்கப்பட்ட வடிவம்தான் இதன் தனி சிறப்பு. எங்கள் தெருவில் மாரியம்மனின் பல்லக்கும் வரும், மாதாவின் சப்பரமும் வரும், முஸ்லிம் சகோதரின் சமய ஊர்வலமும் வரும். எது வந்தாலும் எல்லா இனத்தவரும் வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டு வரவேற்ப்பதும் எங்கள் வழக்கம்.

இதை எதிபார்த்துதான் புரட்சி தலைவர் இந்த ஊரை உருவாக்கினார். மேலும் அவர் கண்ட கனவு இங்கே ஒரே இடத்தில் மருத்துவம், பொறியியல், விவசாயம் என்ற கல்லூரிகள், பள்ளி விலாகங்கள் எல்லாம் ஒர் இடத்தில் அமைக்கப்பட வேண்டும் என்றும் எண்ணம் கொண்டார். அதன்படி தொடக்க நிலையும் ஆரம்பமாகின. காலதின் ஓட்டம் அவர் 1987 ல் டசம்பர் 24 நாள் காலமானார். அதன் பின் வந்த அரசியல் மாற்றங்கள் தன்னிடம் உள்ள தரிசு நிலங்கள் பணமாக்க கல்லூரிகள் இடம் மாற்றப்பட்டன. இப்படி சிறப்பான ஊரை மேன்படுத்த முடியாத அரசுதான் மதச்சண்டைகளில் குளிர்காய்கின்றது. இன கலவரத்தில் ஒப்பாரி நாடகம் ஆடுகின்றது. மதநல்லிணக்கம், இன நல்லிணக்கம், உருவாக்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. மாறாக வேற்றுமையில் அரசியல் நடத்தும் கேவலத்தில் இருப்பதும்....." யாதும் ஊரே யாவரும் கேளீர் " என்ற வரிகள் காணாமல் பொகின்றது.
பின்குறிப்பு: இப்படி மதநல்லிணக்கம் கொண்ட ஊரை அரசு கவனிப்பாரற்று சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள அவலம். அவ்வப்போது பெய்யும் மழையில் வெள்ளம் நீர் வீடுகளில் வந்து விடுவதும், பின் மக்கள் போராட்டத்தில் இடுபடுவதும் அதன் பின் அதிகாரிகள் வந்து வாக்கு சொல்வதும் இன்றும் நடக்கும் சடங்கு ....... பாரம்பரியம் என்று சொல்லிக்கொண்டு மதம், இனம், சாதி என்ற போர்வையில் இருக்கும் ஊர்களை மாற்றி மேன்படுத்தி அண்ணாநகர் பொன்ற நகரங்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு யதார்த்தமான உள்ளங்கள் உருவாக்கும் பட்டரைகள் வளம்வர அரசு அவனம் செய்தால் நாளைய நம் நாடு மக்கள் நல்லிணத்திற்கு நல்ல எடுத்துக்காட்டாக இருக்கும் என்பது என் எண்ணம்.

0 comments: