_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, October 18, 2008

மந்திரக்கோல்

மந்திரக்கோல்
உயரத்தில் பறக்கும் பறவைகளில் ஒன்று பருந்து. பருந்து எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் தன் கூறிய கண்களால் கீழே போகும் பாம்பு, கோழிக்குஞ்சு போவது தெரிந்துவிடும். பருந்துக்கு கோழிக்குஞ்சு என்றால் கொல்லை பிரியம். பருந்து கோழிக்குஞ்சை பார்த்ததும் மின்னல் வேகத்தில் வந்து லபக் என்று எடுத்து சென்றுவிடும். இப்படி வரும் பருந்தை பொராடி விரட்டும் கோழிகள். இப்படி காப்பாற்றி மீதம் உள்ள குஞ்சுதான் கோழியாகும்.

பருந்து கூடுக்கட்டி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் இனம். பருந்து கூடு மிக உயரமான மரகிளையில் (உச்சானிக் கொம்பில்) கூட்டை கட்டும். இக்கூட்டைப் பற்றிய சிறப்பு, இதன் கூட்டை எதிரிகள் யாரும் நெருங்க முடியாதாம் உயரமும் ஒரு காரணம். இதன் கூடு முள் குச்சியினால் கட்டி அதன் மேல் சில புல்களை வைத்து அதன் மேல்தான் முட்டையிடும். மேலும் நம்பிகையற்ற சிறப்பு என்னவென்றால், இதன் கூட்டில் ஒரு முக்கிய வகை குச்சி ஒன்றை வைக்குமாம். இந்த குச்சியை ஏழு கடல் ஏழு காடு தாண்டி எடுத்து வந்த குச்சியாம். இந்த குச்சிதான் இந்த கூட்டிற்கு பாதுக்காப்பு. பருந்து எங்கே சென்றாலூம் கூட்டை பற்றிய எல்லாம் இந்த குச்சிதான் தகவல் சொல்லுமாம் (இணைய வழி தகவல் தொலைத் தொடர்பு). இதன் மூலம் தன் குஞ்சிகளை எதிரிகளிடமிருந்து காப்பாற்றி கொள்ளும் என்பது நாட்டுபுற வலக்கு. மேலும் இந்த குச்சிக்கு ஒரு அபூர்வ சக்தி இருக்குமாம். இந்த குச்சியை வைத்து எல்லா வகையான பூட்டையும் சாவியின்றி திறக்க முடியுமாம். இந்த குச்சியை வைத்துதான் திருடர்கள் பூட்டை திறக்க பயன்ப்படுத்துகின்றனர் என்பது ஒரு நம்பிகையற்ற வலக்கு. ஆனால் அந்த குச்சியை எடுப்பது அவ்வளவு எழிதான காரியமில்லை. உயரம் மற்றும் பருந்து நம்மளை சும்மா விடாது.

இப்படிப்பட்ட மந்திரக்கோலை (பாரதிராஜாவின் முதல்மரியாதை காதலர்கள் போல) நானும் ஒருநாள் இந்த மர உச்சனிக்கு போயி அந்த மந்திர குச்சியை எடுத்து வந்து எல்லா பூட்டையும் திறப்பேன். என்ற கனவு இன்னும் தொடுவானத்தை பிடிப்பது போல உள்ளது எனக்கு.

இந்தக்கால நவீன திருடர்கள் கையில் கடவுசொல் திறக்கும் குச்சி வைதிருப்பார்கள் போல. பெருகி வரும் "இணையத்தில் வழிப்பறி" வங்கி கணக்குகளை மோசடிமுறையில் கைமாற்றம் செய்து ஏப்பம் விடுவது. உலகில் முதல் பத்து இடங்க்களுக்குள் இந்தியா இருப்பதும் வருத்த படவைக்கிறது. இதற்கான தடுப்பு சட்டங்கள் சரியாக இல்லை என்பது மேலும் கவலையை கொடுக்கின்றது. இதனை தடுக்க நாம் கவனத்துடன் பயன்ப்படுத்துவதுதான் சிறந்த முறை. தேவையில்லாமல் பொழுதுபோக்காக இணைய வங்கி பயன்ப்படுதுவதையும் தவிற்கலாம்.

இப்படிதான் சென்றமாதம் என் தோல்ப்பையில் வைத்திருந்த 4GB Memory stick with reader காணவில்லை நூதன முறையில் களவாடி விட்டார்கள். சென்றது சென்றதுதானே. என் வருமாணத்தில் மற்றொன்று வாங்க முடியும் இருப்பினும் அந்த மன அதிர்வு இன்னும் நீங்கவில்லை. இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். இதற்கு கோவி. கண்ணனை (காலம்) வம்புக்கு இழுக்கவில்லை . அல்லது (அறிவகம்)த்திடம் புகார் சொன்னால் காலச்சக்கரத்தை பின்சுழற்றி திருடனை கண்டுபிடிக்க முடியுமா? பார்க்கலாம்.

இருப்பினும் நாம் கவனத்துடன் இருப்பதுதான் சிறந்ததாக உள்ளது. அதற்காக எல்லொரையும் சந்தேக படவா முடியும். அதுக்குதான் நானும் ஒருநாள் அந்த மர உச்சானிக்கு போயி அந்த மந்திரக்குச்சி எடுத்து வந்து எங்க வீட்டு அடுப்புல வச்சி சாம்பலாக்குவேன்......

0 comments: