_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Thursday, October 16, 2008

அப்பத்தாவும் அம்மாவாசையும்!..

அப்பத்தாவும் அம்மாவாசையும்!..
ஏல பொன்னுதாயி, அப்பத்தா எப்படியிருக்கு? இன்னும் அப்படியேதான் இருக்கு சித்தப்பு, இந்த அம்மாவாசை வந்தா தெரியும் பாக்கலாம்.... நல்ல மவராசி ரொம்ம சிரமபடுது பொறந்த புள்ளைக்கு சொல்லியனுப்பி இந்த அம்மாவாசைக்கு எண்ணெய் தேச்சி விடலாமில்ல சொல்லும் சித்தப்பு. ஆமாம் சித்தப்பு அப்பாதான் வேணாங்குது... எத்தனை நாளைக்குதான் வேலை வெட்டி போகாம சிரமப்படுரது....

இப்படி கிராமபுறங்களில் பெசிக்கொள்வதை கேட்டுயிருக்கலாம். அப்பத்தாவிற்கும் அம்மாவாசைக்கும் என்ன தொடர்பு? அப்பத்தாவிற்கு என்ன பிரச்சனை, எதற்காக எண்ணெய் தெய்க்க வேண்டும்? மனிதன் வயதாவதும் முதுமையை அடைவதும் இயற்கைதானே! இந்த முதுமையின் கொடுமை மரணத்தை எதிர்நோக்குவது. இப்படி மரணத்தை நோக்கி செல்லும் அப்பத்தாவை பற்றிதான் இவர்கள் பேசிக்கொள்வது.

இந்த அப்பத்தா 80 வயதை தொட்டவள், இப்பொது உயிர் மட்டுமே இருக்கு. அவளுக்கு எந்த நினைவுகளும் இல்லை ஏதொ கொஞ்சம் எப்பொதாவது பால் மற்றும் நீர் உணவு, கழிப்பிடம் எல்லாமே அதே இடம்தான். படுத்த நிலையில் இருப்பதால் உடம்பெல்லாம் புண்ணாகி எறும்புக்கு உணவாகி கொண்டிருக்கின்றாள்.. எப்போதாவது உடலில் அசைவு வரும். இந்த மரண அவஸ்தையை பற்றிதான் இப்படி ஒரு பேச்சி.

அம்மாவாசையை எதிர்பார்ப்பது, இவளின் முழுநித்திரைக்குதான். அம்மாவாசையன்று சூரியனின் கதிர்கள் சற்றே தடுக்கப்படுவதால் நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறையும் என்பது விஞ்ஞானம். (குறைந்த விஷத்தன்மை பூச்சி கடித்தவர்களுக்கு அம்மாவாசையன்று தடிப்பதும் இந்த எதிர்ப்பு தன்மை குறைவால்தான்).

எண்ணெய் தேய்ப்பது எதனால்? நம்மில் பலர் மாதம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குழிப்பார்கள் உடம்பில் உள்ள சூடு குறையும் என்பது நம்பிக்கை. ஆனால் எண்ணெய் தேய்த்து குழிப்பதனால் எந்த பயனும்மில்லை என்பது நவீன மருத்துவம். எண்ணெயிட்டு குழிப்பதனால் உடலின் எதிர்ப்பு சக்தி தற்காலியமாக குறைகின்றது. இதனால்தான் உடல் சோர்வும் தூக்கமும் வரும் என்பது விஞ்ஞானம். இந்த சோர்வு பெரிதாக பாதிப்பு ஒன்றுமில்லை. அம்மாவசையன்று அப்பத்தாவிற்க்கு எண்ணெய் தேய்த்து குழிப்பதனால் ஏற்படுவதுதான் நிரந்தர நித்திரை.....

மரணப்படுக்கையில் சிரமப்படும் முதியோர்களுக்கு செய்யும் கருணை கொலைதான் அம்மாவாசையில் எண்ணெய் தேய்த்து குழிப்பாட்டுவது. அம்மாவசையில் எதிர்ப்பு சக்தி குறைந்த நேரத்தில் எண்ணெயிடுவதால் மேலும் சக்தியிலந்து மரணத்தை தொட்டுவிடுகின்றது.

இந்திய சட்டத்தில் இன்னும் கருணைக் கொலைக்கு அனுமதியில்லை, பரிந்துரை நிலையிதான் உள்ளது. இந்த எண்ணெய் தேய்ப்புக்கு விஞ்ஞான அதாரம் இல்லை ஆனால் இன்னும் சில இடங்களில் நடத்தப்படுகின்றது.

ஒரு சில: முதல்மரியாதை திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் முதுமை மரணகாட்சியை நம் கண்முன் காட்டுவார். மரணப்படுகையில் இருப்பவர் ஆசையை தவிற்காமல் இருந்தால் மரண சிரமம் நீடிக்கும் என்பதும் நம்பிக்கை. சிவாஜியின் ஆசை தன் காதலி ராதவை பார்த்துவிடவேண்டும், ராதா சிறையிலிருந்து வந்து பார்த்ததும் மரணம் சம்பவிக்கும்படி காட்சி இருக்கும்... இன்றும் மனதை தொட்ட காட்சி...

4 comments:

பின் புலம் said...

Usually old people didn’t bear the cold. The oil bath reduced their body temperature so they dead due to too cold.

Some people did some these kinds of activities to kill the old people. Bathed the old people with villakennai and gave tender coconut to drink.

These activities reduced the body heat of old people due to this they went to dead.

Most of the old people (as u said all activities in bed) they breathed through mouth than nose, their relatives came and poured milk or water to their mouth. Due to this activity they disturbed to breath and they tensed to death.

Knowingly or unknowingly we killed the old people by doing these activities.

ஆ.ஞானசேகரன் said...

// arul said...
Usually old people didn’t bear the cold. The oil bath reduced their body temperature so they dead due to too cold//
கூடுதலான தகவலுக்கும் வருகைக்கும் நன்றி அருள்..

கோவி.கண்ணன் said...

நல்ல தகவல்கள்...ஒரு சிறுகதை ஆக்கி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வேறு எதும் சிறுகதை எழுத முயற்சி செய்யுங்களேன்

ஆ.ஞானசேகரன் said...

கோவி.கண்ணன் said..//நல்ல தகவல்கள்...ஒரு சிறுகதை ஆக்கி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். வேறு எதும் சிறுகதை எழுத முயற்சி செய்யுங்களேன்//
நன்றி கண்ணன் சிறுகதை எழுதும் அளவிற்க்கு பயிற்சி எடுக்கவில்லை இருப்பினும் முயற்சி செய்கின்றேன்...