_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Saturday, October 4, 2008

சங்கீதம் தெரியாட்டி பரவாயில்லைங்க! இங்கீதம் தெரிஞ்சுகோங்க!..

சங்கீதம் தெரியாட்டி பரவாயில்லைங்க! இங்கீதம் தெரிஞ்சுகோங்க!..
ஆமங்க! கொஞ்சம்,... கொஞ்சனாலும் இங்கீதம் இருக்கனுங்கோ!.. நாம நம்மலப்பத்தி நினைப்பது போல மத்தவங்களையும் நினைக்குறதுல என்ன தப்புன்னு சொல்லுங்க. உங்களுக்கு எது சரியின்னு படுதோ அதை செய்வதும் சரிதாங்க. அதை செய்யும் முன் மற்றவர்களுக்கு என்ன சங்கடத்தைக் கொடுக்கும் என்பதையும் கொஞ்சம், கொஞ்சனாலும் நினைப்பது என்ன தப்புன்னு சொல்லுங்க!...

இப்படிதான் சாப்பாட்டுக் கடைக்கு சாப்பிட சென்றேன், கும்பல் அதிகமாக இருந்தது கடைசியில் இரண்டு இருக்கை மட்டும் இருந்தது, நான் அதில் ஒன்றில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். ஒருவர் இடமில்லாமல் நின்றிருந்தார் அவரை கூப்பிட்டு என் பக்கத்தில் உள்ள இருக்கையை காட்டினேன். நான் வலதுப் பக்க சுவர் ஓரமாக அமர்ந்தேன்,வலது கை பக்கம் சுவர்யிருந்ததால் சாப்பிட சிரமம்தான். இருப்பினும் அருகில் உள்ளவர் நன்றாக உண்ண வசதியாக இருக்கட்டுமே என்று ஒடுங்கியமர்ந்தேன். அவர் பூரி சாப்பிட்டார், என்னமோ இவர்மட்டும் தான் சாப்பிட வந்தவர் போல அகன்று அமர்ந்து வெள்ளகார துரை தோசையை கடினப்பட்டு கையில் சாப்பிட்டால் எப்படியிருக்குமோ அப்படி ஒரு அலட்டல். அவர் முலங்கை என் முகம் அருகில் வந்து செல்கிறது, எனக்கோ சாப்பிட சிரமமாக இருந்தது. என்னபன்னுவது இதுபொன்ற மனிதர்களையும் சந்திக்கவேண்டிதான் இருக்கும்.

இன்னும் சிலர் பேருந்தில் இருவர் அமரும் இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர்வது. அப்படியே மற்றும் ஒருவர் வந்து அமர்ந்தால் அவர்மட்டுமே அகன்று அமர்ந்து தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது.

நண்பர்களுடன் இருக்கும்போது யாருடனோ தொடர்ந்து தொலைபேசியில் பேசுவது.

வீட்டுக்கு வந்த நண்பரை கவணிக்காமல் தொலைகாட்சியில் மூழ்கி விடுவது.

யாரை பற்றியும் கவலைப்படாமல் நால்வர் மத்தியில் புகை ஊதித் தல்லுவது.

இப்படி மற்றவர்களை சங்கடங்களுக்கு உற்ப்படுத்துவது பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். யாருக்கும் உதவி செய்ய வேண்டாங்க இம்சை கொடுக்காமலிருந்தாலே கோடி புன்னியமுங்கோகோகோ.....

4 comments:

Anonymous said...

neenda naal aasai niraiveriya thitrupthi sir

Anonymous said...

very good,very good

ஆ.ஞானசேகரன் said...

ramyapurush said...
very good,very good
வருகைக்கு நன்றி

ஆ.ஞானசேகரன் said...

Anonymous said...
neenda naal aasai niraiveriya thitrupthi sir
யாருடைய ஆசை , மிக்க நன்றி