_/\_ வணக்கம் _/\_ அம்மா அப்பா வலைபூவிற்கு வருகைத் தந்து என்னை ஊக்கப்படுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் கோடி நன்றிகள்! _@^w^@_ அன்புடன் ஆ.ஞானசேகரன்

Tuesday, August 19, 2008

ஒருத் துளி! ஒரு துகள்! சிந்திக்காமல் சிதையும் உடல்கள்...

ஒருத் துளி! ஒரு துகள்! சிந்திக்காமல் சிதைம் உடல்கள்...



ஒருத் துளி! ஒருத் துகளில்!...
உருவான உலகே! உன்னை,..
ஒருத் துளி ஒரு அணுவால்
உறுமாற்றத் துடிக்கும் மனிதன்!...

எத்தனை யுத்தம் கண்டாய்,..
எத்தனை சீற்றம் கண்டாய்...
யுத்த மில்லா உலகை,.
நீ எங்கே? கண்டாய்......

எனக்கு தெரியும்,..
நீமட்டும் பொறுமை யிலந்தால்!...
மானுடம் மடிந் தல்லவா போகும்!
அகிலமே ஆடிதான் போகும்!...

மதி கெட்ட மனிதா!
உன் மனம் கெட்டாப் போனது!,..
ஆக்கம் பெற்ற அணுவை,
அனல்கக்க ஏன்? வெடித்தாய்..

வெடித்த துகள்!...
வெந்து தின்ற குழந்தைகள்...
சிதறிய துகள்!...
சிதைந்துபோன பெண்மனிகள்....

உலக யுத்தம் காண,..
இன்னுமா? துடிக்கிறது மனம்..
அணு யுத்தம் காண,... இந்த
அண்டமெ!!! இருக்குமா சொல்ல்ல்ல்ல்...


0 comments: